திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகியான கே எஸ் சித்ரா அவர்களின் மறைந்த மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
மனதை வருடும் குரலுக்கு சொந்தக்காரரான பாடகி சித்ராவை தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் ‘சின்னக்குயில் சித்ரா’ என்று தனது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளும் பல ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். இதுவரை ஆறு முறை தேசிய விருதையும் வாங்கியுள்ளார் பாடகி சித்ரா.
இவர் குரலில் வெளிவந்த கண்ணாளனே, மலர்கள் கேட்டேன், நான் போகிறேன் என பல எண்ணற்ற பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது என்றால் அது மிகை ஆகாது. தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக விளங்கி வருகிறார். பாடகி சித்ரா அவர்கள் 1988ல் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2002ல் நந்தனா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆர்ட்டிசம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை. இக்குழந்தையின் மீது சித்ரா அவர்கள் அதிக அன்பு செலுத்தி வந்தார். தான் எங்கு சென்றாலும் கூடவே அழைத்து செல்வார். 2011ல் துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது தனது மகளையும் அழைத்து சென்றார்.
அங்கு நந்தனா நீச்சல் குளத்தில் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துவிட்டார். யாரும் எதிர்பார்க்காத இந்த விபத்து தற்போது சித்ரா அவர்களின் மனதில் நீங்காத ஒன்றாக உள்ளது. இன்று அவர் தனது மறைந்த மகளின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தனது மகளின் அழகான புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு….
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…
நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…