தென்னிந்திய திரை உலகின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ‘சில்க் ஸ்மிதா’ இவர் இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய’ வண்டிச்சக்கரம்’ எனும் திரைப்படத்தில் ‘சிலுக்கு’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
இத்திரைப்படத்திற்கு பிறகு தான் ‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்பட்டார். தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து திரைப்பட உலகின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
மூன்று முகம் , சகலகலா வல்லவன் ,அலைகள் ஓய்வதில்லை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குமா, மூன்றாம் பிறை போன்றவை இவர் நடிப்பில் வெளியான சில ஹிட் படங்கள்.
குறுகிய காலத்துக்குள் அதிக படங்களில் நடித்த இவர் தனது 35 வது வயதில் தூக்கு போட்டு தன்னுடைய வீட்டிலேயே இறந்தார்.
காதல் தோல்வி இவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. சில்க் ஸ்மிதாவின் நடன திறமையும் கண்களின் வசீகரமும் திரைப்பட உலகில் ஒரு அழியாத சுவட்டை விட்டு சென்றுள்ளது என்பதை யாராலும் மறக்க முடியாது.
இப்படி திரையுலகில் ஒரு கலக்கு கலக்கிய இவரின் மரணம் தற்பொழுது வரை அவருடைய ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் அவர் இறந்த நினைவு நாளான இன்று பலரும் பார்த்திடாத சில்க் ஸ்மிதாவின் UNSEEN புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சண்முக பாண்டியன் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…