சென்னையின் முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை கண்டித்தும் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டிய தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகம் ஆதரவு அளித்துள்ளது. அதனைப் போலவே நடிகை சனம் ஷெட்டி போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளார். பத்து நாட்களுக்கு மேலாக தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் இதுவரை ஏழு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில் தீர்வு எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் போராட்டக்காரர்களுடன் களத்தில் இறங்கிய நடிகை சனம் ஷெட்டி, அரசு மற்றும் அமைச்சர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுவையில், அரசாங்கத்திற்கு அசிங்கமாக இருக்க வேண்டும். பத்து நாட்களாக போராடுகிறார்கள். என்ன பிரச்சனை என்று கூட கேட்காமல் அப்படியே விட்டுட்டாங்க. கொரோனா காலகட்டத்தில் தங்கள் உயிர் மற்றும் குடும்பத்தை கூட பார்க்காமல் எங்களுக்காக வந்து நின்றார்கள். தெரு தெருவாக வந்து சுத்தம் செய்தவர்கள் என் நண்பர்கள். இவர்களுக்காக குரல் கொடுப்பது என்னுடைய கடமை. எனக்கே இருக்கும்போது இந்த அரசாங்கத்திற்கு ஏன் இல்லை? உங்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்தார்கள். ஆனால் அதை கண்டுக்காமல் இன்னும் எத்தனை நாட்கள் தான் இவர்களை வைத்திருப்பீர்கள்.
சென்னை மேயர் பிரியா வராங்க செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க. ஆனா தீர்வு கிடைக்கல. நீங்கள் கொடுத்த வாக்குறுதியை தான் கேட்கிறார்கள். அதையே நீங்கள் செய்ய வில்லை, உங்கள் நேரம் முடிய போகுது, இனிமே எப்படி ஓட்டு கேட்டு வருவீங்க என்று தெரியல. மக்களுக்காக ஒரு பாலிசி மாற்ற முடியவில்லை என்றால் நீங்கள் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன. மக்கள் தேவை தான் முக்கியம். அதை விட்டுவிட்டு சிலையெல்லாம் உங்களை யார் கேட்டது. அமைச்சர் நேரு நீங்கள் உயிருடன் தான் இருக்கீங்களா. தயவுசெய்து இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் ப்ளீஸ் என்று நடிகை உருக்கமாக பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…