‘வாரணம் ஆயிரம்’ பட நடிகை சமீரா ரெட்டி கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?…

By Samrin

Updated on:

2008 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி.

   

ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்.  1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி  பிறந்தார்.

இவர் தந்தை போக்குவரத்துத் தொழிலில் ஈடுபட்டிருந்தார், தாயார் நட்சத்திர ரெட்டி.இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

இவர் மும்பை நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிடென்ஹெம் என்ற கல்லூரியில் பட்டம் பெற்றார்.

நடிகை சமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது  “அவுர் ஆஹிஸ்தா” என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் பணிசெய்தார் .

இதன் மூலம்  2002 ஆம் ஆண்டு ‘மெய்னே தில் துஜ்கோ தியா’ என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதை தொடர்ந்து 2004ஆம் ஆண்டுவெளியான  ‘முஸாபிர்’ என்னும் திரைப்படத்தில்நடித்தார்.

2010ஆம் ஆண்டு  நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘அசல்’ திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்துள்ளார்.

இவர் தமிழில்  வெடி, வேட்டை போன்ற  படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி  அக்ஷய் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு. மும்பையில் தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.

இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகியுள்ளது .