‘தமிழும் சரவஸ்வதியும்’ சீரியல் நடிகை மீரா கிருஷ்ணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Updated on:

சின்னத்திரை சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமானவர்  நடிகை மீராகிருஷ்ணா. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

 

கேரளா ஸ்கூல் ஃபெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் சேண்டல்வுட்டில் பிரபலமடைந்தார்.

அதன் மூலம் கிடைத்த வாய்ப்பினால் ‘மார்கம்’  என்ற படம் மூலமாக கேரள சினிமாவில் ஹீரோயினா அறிமுகமானார்.

இவர் பல படங்களில்  நடித்துள்ளார் . நடிகை மீரா சிவா  என்பவரை திருமணம் செய்து கொண்டார் .

பிறகு சென்னையில் செட்டிலான மீரா சினிமாவுக்கு பிரேக் கொடுத்துவிட்டு, தனது குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர் கணவர் சினிமாவில்  நடன ஆசிரியர் .நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில்  ரீ என்ட்ரி கொடுத்தார்.

கலைஞர் டிவியில் ‘பொக்கிஷம்’ சீரியல் மூலமாக  அறிமுகமானார்.  அதன் பின் சன் டிவியில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியல் மூலம் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார் .இதில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

இவருக்கு  அம்மா கேரக்டர் சரியாக பொருந்தியதால் அடுத்தடுத்து  சீரியல் அம்மா ரோலில் வாய்ப்பு   கிடைக்க தொடங்கியது.

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியலில் நெகடிவ் ரோலில் இவருக்கு வழங்கப்பட்டது அதிலும் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்’தமிழும் சரவஸ்வதியும்’  சீரியலில் தீபக்கு அம்மாவாக நடிக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பாலோவ் செய்கின்றனர்.

இவர் கணவர் லாரன்ஸ்  மாஸ்டரிடம்  உதவி நடன இயக்குனராக பணிசெய்கிறார் .இவர் திருமலை படத்தில் வரும் ‘தாம் தக்க தீம் தக்க கூத்து’ என்ற பாடலில்  நடிகர் விஜய் மற்றும் லாரன்ஸ் நடுவில் டான்ஸ் ஆடி இருப்பார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.