2006ல் இயக்குனர் சுந்தர் சி நடிகராக களமிறங்கிய சூப்பர் ஹிட் திரைப்படம் தலைநகரம். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக களமிறங்கியவர் தான் நடிகை ஜோதிர்மையி. கேரளாவில் பிறந்த இவர், நடிக்க வருவதற்கு முன்பு தொகுப்பாளினியாக பணியாற்றியவர். ‘பைலோட்ஸ்’ என்ற படத்தின் மூலம் முதன்முதலில் மலையாள திரையுலகில் கால்பதித்தார்.
இதைதொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் ‘தலைநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னர் விஜயகாந்த் நடித்த சபரி,நான் அவன் இல்லை,வெடிகுண்டு முருகேசன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் தமிழ் ரசிகர்களிடம் சரியான வரவேற்பு கிடைக்காததால் திரும்பவும் தனது சொந்த மண்னான கேரளாவிற்கு சென்று அங்கே ஒரு சில ஆண்டுகள் படங்களில் நடித்தார்.
2004 ல் நிஷாந் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விவகாரத்தை பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் 2015ல் அமல் நீரத் என்ற மலையாள திரைப்பட இயக்குனரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகை ஜோதிர்மயி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். ‘முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே’ என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் ஆசைப்பட்ட ஒரு படத்தை தான் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கு காலமும் நேரம்தான்…
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…
பாடல்களில் கிராமத்து இசையை புகுத்தி 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவையே தன் பாடல்களால் கட்டுக்குள் வைத்திருந்தவர் இசைஞானி இளையராஜா.…
லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்த மேத்யூ தாமஸ் குடும்பம் விபத்தில் சிக்கிய நிலையில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றார்.…
பிரபல சீரியல் நடிகையான ரச்சிதா மகாலட்சுமி சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…
சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…