தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவே பார்த்து பயந்த ஒரு பெண் ஆளுமை என்றால் அது ஜெயலலிதா எனலாம். சினிமாவிற்குள்ளேயே ஒரு கட்டாயத்தின் பேரில் தள்ளப்பட்ட ஜெயலலிதா, அப்போதைய சூப்பர் ஸ்டாரான எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக பழகியதை யாராலும் மறைக்க முடியாது. தனது திரைப்பட வாழ்க்கையில் அவருடன் தான் அதிகப் படங்களை அவர் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றெல்லாம் எதிர்பாக்கப்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரோ தனது கவனத்தை அரசியல் பக்கம் திருப்பி, அப்படியே சென்று விட்டார்.
ஆயினும் ஜெயலலிதா மீது அவர் கொண்ட அன்பின் பால், அவரையும் அரசியலுக்குள் இழுத்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவிடம் எந்த ஒரு நடிகர் சிரித்துப் பேசினாலும் அவருக்கு உடனே கோபம் வந்து அவர்களை ஏதாவது செய்யவேண்டும் எனும் அளவுக்கு இறங்கி விடுவாராம். இந்த செய்திகள் அப்போதே எம்ஜிஆரின் வட்டாரங்களிலிருந்து கசிந்தது தான். ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் மீது கொண்ட கோபத்தினால் ஜெயலலிதா சிவாஜியுடன் இணைந்து பல படங்களை நடிக்கவும் செய்தார். பின்னாளில் அதனையும் சரி செய்தார் எம்.ஜி.ஆர் என அப்போதைய செய்திகள் பரவின.
அதேப் போல், ஜெய்சங்கருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு கிடைத்துள்ளது. ஜெயலலிதா சரளமாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர், அதேப் போல் ஜெய்சங்கரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவாராம். அப்படி இருவரும் படப்பிடிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக பேசி சிரித்து மகிழும் அளவுக்கு வந்ததை கவனித்து வந்த சிலர் எப்படியோ எம்ஜிஆரிடம் பற்ற வைத்துவிட்டனர். டென்ஷனான எம்ஜிஆர் உடனடியாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஜெய்சங்கர் வீட்டுக்கு சென்று அவரை சுடும் அளவுக்கு கோபம் வந்து விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஜெய்சங்கரின் நல்ல நேரம் அவர் வீட்டில் இல்லை எனவும் ஒருவேளை அவர் இருந்திருந்தால் எம்ஜிஆர் அவரை சுடவும் தங்கி இருக்க மாட்டார் எனவும் அந்தக்கால நடிகை குட்டிபத்மினி சமீபத்தில் ஒரு வீடியோ மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஜெயலலிதா திருமணம் மீது ஆர்வம் கொண்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆரை திருமணம் செய்ய முடியாது என்று தெரிந்த பிறகு ஜெய்சங்கரை தான் திருமணம் செய்துக் கொள்ள விரும்பியதாகவும், மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…