இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் அஞ்சலி நாயர்.தமிழ் திரைரியுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங் செய்துள்ளார். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். அவர் ‘பந்தங்கள் பந்தங்களா’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். இவர் 100க்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரின் பெற்றோர் உஷா மற்றும் கிரிதரன். குழந்தை கலைஞர் ஆகவே தன் வாழ்க்கையை தொடங்கினார். ‘5 சுந்தரிகள்’ என்ற படத்தில் அஞ்சலி நாயருடைய 5வது மகளாக நடித்துள்ளார். இவர் அதிகமாக மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் இரண்டாவது சிறந்த நடிகை என்ற திரைப்பட விருதை பெற்றுள்ளார்.2019 ஆம் ஆண்டு ‘நெடுநல்வாடை ‘ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை துறையில் அறிமுகமானார்.
இப்படத்தில் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாக ரசிகர் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து ‘டாணாக்காரன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு வெளியான ‘எண்ணித் துணிக’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ‘அவள் வசந்தம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தன்னுடைய முழு திறமையும் காட்டியுள்ளார் அஞ்சலி நாயர்.
தற்போது பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலி நாயர், ‘தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தேன். முதல் படத்தின் வில்லன் என்னை தவறாக நடத்தினார் மற்றும் அவர் அந்தப் படத்தின் துணை தயாரிப்பாளராகவும் இருந்தார்’ என்று கூறியுள்ளார். இவரது பேட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…