#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கி, தனது கடின உழைப்பால் சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் நுழைந்து தற்பொழுது ரசிகர்களால் குட்டி தளபதி என கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இவர் தமிழில் ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். முதல் படமே இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்ததாக வெளியான ‘எதிர்நீச்சல்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புனையாக அமைந்தது என்றே கூறலாம். இதைத் தொடர்ந்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் , மான் கராத்தே, பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களையே பெற்றது.
இதைத்தொடர்ந்து வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த வருட பொங்கலுக்கு ரிலீசான ‘அயலான்’ திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக இவர் sk 21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 35 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ள நிலையில், சமீபத்தில் தனது பூர்வீக கிராமமான திருவீழிமிழலையில் பிரம்மாண்ட புது வீட்டை கட்டினார்.
சினிமாவில் நுழைந்து வெறும் 11 ஆண்டுகளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தற்பொழுது 110 கோடி சொத்து இருப்பதாகஇணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதோடு மட்டுமின்றி நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி, அதன்மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…
தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…
மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…
தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…