Categories: CINEMA

நகைச்சுவை நடிகரான சாரப்பாம்பு சுப்பராஜுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா.. பலரும் அறியாத ஆச்சர்ய தகவல்..

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் முன்னணி நடிகரான வடிவேலு, தனக்கென ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரின் நகைச்சுவை காட்சிகளுக்கு உறுதுணையாக அவரோடு ஒரு குழுவே இருந்தது. அதில் ஒருவர்தான் சார்ப்பாம்பு சுப்பராஜ்.

மருதமலை படத்தில் இடம்பெற்ற காமெடிக் காட்சியில் அவர் சாரப்பாம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் இந்தப் பெயரை பெற்றார். வடிவேலுவோடு 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுப்பராஜ், அவர் காமெடிக் காட்சிகளுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

ஆனால் சுப்பராஜ் நடிகர் மட்டுமில்லை. அவர் இயக்குனர் ஆகும் ஆசையோடுதான் சினிமா உலகுக்கு வந்துள்ளார். 1977-இல் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினார். பாரதிராஜாவிடம் இவரை உதவி இயக்குனராக கவியரசு கண்ணதாசன் தான் சேர்த்துவிட்டுள்ளார்.

அதன் பின்னர் பலப் படங்களில் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  18 இயக்குநர்களிடம் 49 படங்கள் துணை இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பின்னர் நடிகர் ராஜ்கிரண் கம்பெனியில் 13 வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பின்னர்தான் அவருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ‘புண்ணியவதி’ என்ற படத்தை இவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகன் இறந்ததால் அப்படம் முடிக்கப்படாமல் வெளிவராமலேயே நின்றுபோனது.

இதன் பின்னர் ஏழு ஆண்டுகள் வாய்ப்புகள் எதுவுமின்றி கஷ்டப்பட்டார்.  இதன் பின்னர்தான் ‘ராஜஸ்தான்’ என்ற படத்தில் நடிகர் வடிவேலுவுக்கான காட்சிகளுக்கு வசனம் எழுதினார். அதன் பின்னர் வடிவேலுவின் அறிவுரைப்படி அவருடனேயே நடித்து மிகவும் பிரபலமானார்.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago