Categories: CINEMA

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத பிரியா மீண்டும் தனது தந்தையுடன் சேர்ந்து இருக்கின்றார். தற்போது ராஜ்கிரண் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 80’ஸ், 90’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் ராஜ்கிரன். இவரின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். தங்களுடைய திருமண வீடியோ மூலம் ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் ராஜ்கிரன் தரப்பிலிருந்து அவர் என்னுடைய மகளே கிடையாது.

அந்த சீரியல் நடிகர் தன்னை கேவலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக இப்படி செய்திருக்கின்றார். அவருக்கு பணம் தான் முக்கியம். பணத்திற்காக தான் இப்படி திருமண நாடகம் போட்டு இருக்கின்றார் என்று கூறியிருந்தார். அதை தொடர்ந்து பிரியா அதனை மறுப்பு தெரிவித்து நாங்கள் உண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களை வெறுத்தவர்கள் முன்பு நன்றாக வாழ்ந்து காட்டுவோம் என்றெல்லாம் சவால் விட்டிருந்தார்.

ஆனால் கடைசியில் ராஜ்கிரன் சொன்னபடி தான் நடந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியா கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த திருமணத்திற்கு பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். நாங்கள் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகிறோம்.

எங்களுடைய திருமணம் சட்டபூர்வமான திருமணம் கிடையாது. இந்த திருமணத்தினால் என்னை வளர்த்த அப்பாவை நான் மிகவும் கஷ்டப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது என்னை கைவிடாமல் காப்பாற்றி இருக்கிறார். அவர் எனக்காக செய்த செயல் நான் எதிர்பார்க்காத கருணை, மன்னித்திடுங்க டாடி என்று கை கூப்பி பேசியிருந்தார்.

அதைத் தொடர்ந்து பிரியா மீண்டும் ராஜ்கிரனுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராஜ்கிரண் அவரது மனைவி மற்றும் மகள் மகன்களுடன் கலந்து கொண்டு பல விஷயங்களை பேசி இருந்தார். அதில் தனது மகனின் திருமணம் குறித்தும் கூறியிருந்தார். அவர் அதில் தெரிவித்திருந்ததாவது “என் மகளை வெளி உலகத்தை காட்டாமல் வளர்த்து விட்டேன்.

அதுக்கு வெளி உலகம் தெரியவில்லை. சின்னக் குழந்தை போல் வெளி உலகத்தை பார்க்கணும் என துடித்தது, வெளியே போய் பாத்துட்டு வந்துடுச்சு. அவ்வளவுதான் அதுக்கு மேல அதுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கல. அவரின் அறியாமையால இந்த தவறு நடந்துருச்சு, என் பொண்ணு பாடம் படிச்சிட்டு திரும்பி வந்துருச்சு. திரும்பி வந்தவுடன் நான் என் மகளை கட்டிப்பிடித்து அனைத்து தங்கம் செல்லம் பொண்ணு என்று கொஞ்சினேன். என் பொண்ணு மீண்டும் மனசார ஏத்துக்கிட்டேன். அவர ஒரு கேள்வி கூட கேட்கணும்னு எனக்கு தோணல” என அந்த பேட்டியில் ஓபனாக பேசியிருந்தார் ராஜ்கிரண்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

4 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

5 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago