Categories: சினிமா

தயாரிப்பாளர் பையன்னா கிளம்பி வந்துடுவீங்களா?… ஜீவாவை முகத்துக்கு நேராக திட்டிய நாசர்… கரெக்டாதான் சொல்லி இருக்காரு!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் அவர் தந்தை தயாரித்த ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து  டிஷ்யூம், பொறி, கோ, நண்பன் என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் இடையில் ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்த ஜீவா திடீரென சில தவறான படங்களை தேர்வு செய்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்தார். இப்போது அவர் கைவசம் பெரிதாகப் படங்கள் இல்லை. சமீபத்தில் ப்ளாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இதையடுத்து கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனது முதல் படத்தில் ஒரு சம்பவம் பற்றி ஜீவா ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஆசை ஆசையாய் படம் நடிக்கும் போது எல்லோரும் என்னிடம் நன்றாகப் பேசுவார்கள். நாசர் சார் மட்டும் சரியாகப் பேசவில்லை. நானாக சென்று பேசினாலும் அவர் கண்டுகொள்ள மாட்டார்.

ஒரு நாள் என்னை அழைத்து ‘தம்பி நீ ஏன் சீனுக்கு ப்ரிப்பேர் ஆகவில்லை. சும்மா நிற்கிறாய்’ என்று கேட்டார். நான் “இல்ல சார் நான் ப்ராம்டிங் வச்சு அப்படியே நடிச்சுடுவேன்’ என்றேன். அதைக் கேட்டதும் அவர் கோபப்பட்டார். ‘ஏன்ப்பா தயாரிப்பாளர் பையனா இருந்தா அப்படியே கிளம்பி வந்துவிடுவீங்களா? எதுவுமே ப்ரிபேர் பண்ணாம’ எனத் திட்டினார். அப்போதுதான் எனக்கு ஒரு நடிகனாக இருக்க என்னவெல்லாம் பண்ணனும் என்பதே புரிந்தது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

1 minute ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

7 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

14 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

54 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 மணத்தியாலம் ago