Categories: CINEMA

இளையராஜாவோடு சண்டை போட்டு பிரிவு… அந்த ஒரு பாட்டைக் கேட்டு பேப்பரை வீசியெறிந்த வைரமுத்து… அப்ப சொன்ன அந்த ஒரு வார்த்தை!

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

வைரமுத்துவாவது பொது மேடைகளிலோ அல்லது பழைய பாடல்கள் பற்றி பேசும்போதே இளையராஜாவின் பெயரைக் குறிப்பிடுவார். ஆனால் இளையராஜா அவர்கள் பிரிவுக்குப் பிறகு வைரமுத்து பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. இந்நிலையில் மறைந்த நடிகர் மாரிமுத்து இவர்கள் பிரிவு மற்றும் இளையராஜா மேல் வைரமுத்து வைத்திருந்த மதிப்புப் பற்றி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

#image_title

அந்த நேர்காணலில் “வைரமுத்து இளையராஜாவை விட்டு பிரிந்த பிறகு பாக்யா பத்திரிக்கையில் ‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்” என்று ஒரு தொடர் எழுதினார். அப்போது நான் அவரிடம் உதவியாளராக இருந்தேன். அதில் ஒவ்வொருத்தரைப் பற்றியும் ஒவ்வொரு அத்தியாயம் எழுதி வந்த போது இளையராஜா பற்றிய அத்தியாயம் எழுத வேண்டிய நாள் வந்தது.

அப்போது அவர் மொட்டை மாடியில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எங்கோ தூரத்தில் இளையராஜாவின் பாடலான “உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி” பாடல் ஒலித்தது. அதைக் கேட்டு எமோஷனலான வைரமுத்து, எழுதிக் கொண்டிருந்த பேப்பரை தூக்கியெறிந்து விட்டு “இவன எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. எத்தன வருஷம் ஆனாலும் இவன் மட்டும் இங்க இருப்பான்” என சொன்னார்.” என மாரிமுத்து அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.

 

vinoth

Recent Posts

700 லிருந்து 800 கோடி வரை.. லைக்கா நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் ஃபேஷன் ஸ்டுடியோ.. யாருப்பா இவங்க..

தமிழ் சினிமாவில் தற்போது லைகா ப்ரொடக்ஷனுக்கு சமமாக 700 முதல் 800 கோடி வரையிலான படங்களை தயாரிக்கின்றது பேஷன் ஸ்டுடியோ…

17 நிமிடங்கள் ago

என் சைடு தப்பு இருக்கு.. சொந்த குரலில் டப்பிங் பேசாததற்க்கு காரணம் இதுதான்.. பளிச்சுன்னு பதில் சொன்ன மைக் மோகன்..!!

80,90's காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மைக் மோகன். நடிப்பின் மூலம் மைக் மோகனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே…

1 மணி நேரம் ago

தக்லைஃப் படத்துக்காக தன்னோட பாலிஸியவே மாத்திகிட்ட மணிரத்தினம்.. இது எல்லாத்துக்கும் காரணம் அவங்க தான்..

தக்லைஃப் திரைப்படத்தை எடுப்பதற்கு அதிக நாட்களை மணிரத்தினம் எடுத்துக் கொள்வதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான…

1 மணி நேரம் ago

அட்லி படத்தில் கமலஹாசனா..? என்னப்பா புதுசு புதுசா புரளியை கிளப்புறீங்க… ஒருவேளை இருக்குமோ..!

இயக்குனர் அட்லி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் தற்போது கமலஹாசன் நடிக்க இருப்பதாக புதிய தகவல் ஒன்று…

2 மணி நேரங்கள் ago

பாலையா, நாகார்ஜுனாவை தொடர்ந்து.. 30 வயதிற்கும் குறைவான 2 ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகர்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் தன்னைவிட 30 வயதுக்கு குறைவான நடிகைகளுடன் நடிக்க இருப்பது குறித்து ரசிகர்கள்…

3 மணி நேரங்கள் ago

வடிவேலு ஒரு Gang வச்சிருந்தாரு.. அவங்க எல்லாம் வேற யார் கூடயாவது நடிச்சா அவ்வளவுதான்.. மனம் திறந்த சிங்கமுத்து..!

நடிகர் வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதை இந்த தொகுப்பில்…

3 மணி நேரங்கள் ago