தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகர் தான் மாதவன். சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். குறிப்பாக பெண்கள் மத்தியில் இவருக்கு தனி மவுசு இருந்தது. இன்றும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருடைய நடிப்பில் இறுதியாக டெஸ்ட் திரைப்படம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் நயன்தாரா நாகியாக நடித்திருந்தார். கிரிக்கெட்டையும் குழந்தை இல்லாத பெண்ணின் வலியையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் மாதவனின் மனைவி பற்றிய சில விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் மாதவனின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் அவருடைய மனைவி சரிதா முக்கிய பங்கு வகித்து வருகிறாராம். மகாராஷ்டிராவின் நாக்பூரில் பிறந்த சரிதா 1990களின் முற்பகுதியில் விமான பணி பெண்ணாக பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்துள்ளார். மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடந்த ஆளுமை மேம்பாட்டு பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட போது மாதவன் தான் இவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அன்று முதல் இன்று வரை இருவருமே ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
மின்னணுவியல் பட்டம் பெற்ற மாதவன் இந்தியா முழுவதும் தொடர்பாடல் மற்றும் பொது பேச்சு பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றார். கடந்த 1991 ஆம் ஆண்டு கோலாப்பூரில் நடந்த ஒரு பட்டறையில் விமான பணிப்பெண் பணிக்கான நேர்காணலுக்கு தயாராக இருந்த சரிதா கலந்து கொண்டுள்ளார். சுமார் 8 ஆண்டுகள் காதலித்து இருவரும் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு வேதாந்த் என்ற ஒரு மகன் உள்ளார். அவர் தற்போது சர்வதேச நீச்சல் வீரராகவும் உள்ளார். சரிதா வெறும் பிரபல நடிகருடைய மனைவி மட்டுமல்லாமல் இவர் ஒரு ஃபேஷன் டிசைனர் ஆகவும் இருந்து வருகிறார்.
மாதவன் நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இவர்தான் உடை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவின் க்ளாகன்ஃபர்ட்டில் “சரிதா” என்ற பெயரில் சொந்த ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும் நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுச் செலவுகளைக் கவனிப்பது தன் மனைவி தான் என மாதவனும் கூறியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து மாதவன் லியுகோ பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் இருவரும் இணைந்து நடத்தி வருகின்றார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…