தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
அப்படிப்பட்ட சிவாஜிக்கு நடிப்புக்காக ஒருமுறை கூட தேசிய விருது வழங்கப்படவில்லை. அதற்குக் காரணமாக சொல்லப்பட்டது, சிவாஜி கணேசன் ஒரு ஓவர் ஆக்டிங் நடிகர் என்ற விமர்சனங்கள்தான். தேசிய விருது குழுவில் இருக்கும் ஜூரிகளுக்கு சிவாஜி நடிப்பு பற்றி இத்தகைய ஒரு விமர்சனம் இருந்ததாக எழுத்தாளரும் நடிகருமான பாரதிமணி தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
இதே விமர்சனத்தை சிவாஜியின் சக நடிகர்கள் சிலரும் அவரிடமும் நேரிடையாகவே சொல்லியுள்ளனர். அப்படி ஒருமுறை நடிகர் சோ சிவாஜியுடன் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஒருமுறை சிவாஜியோடு சோ சேர்ந்து நடித்த படத்தின் ஷூட்டிங்கின் போது “சிவாஜி கணேசன் உணர்ச்சிப்பூர்வமான ஒரு காட்சியில் நடித்துமுடித்துவிட்டு, அருகில் இருந்த சோவிடம் எப்படி இருந்தது என் நடிப்பு” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு சோ வழக்கம் போல தன்னுடைய நக்கலான பேச்சால் “கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணீட்டிங்க” எனக் கூறியுள்ளார். அவரை தன்னுடைய ரூமுக்கு அழைத்து சென்ற சிவாஜி கணேசன், “அதே காட்சியை ஒரு ஹாலிவுட் நடிகன் நடித்தால் எப்படி இருக்கும் என்று நடித்துக் காட்டியுள்ளார். இதே போல நான்கு வெவ்வேறு மாடுலேஷனில் அவர் நடித்துக் காட்ட, அதைப் பார்த்த சோ வியந்து போய் கண்கலங்க ஆரம்பித்து விட்டாராம்.
என்னால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க முடியும், ஆனால் நான் இப்படி நடித்தால்தான் இங்குள்ள கடைமட்ட ரசிகன் வரை செல்லமுடியும் என்பது போல இருந்ததாம் சிவாஜியின் பதில்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…