கடந்த சில நாட்களாகவே நடிகர் நாகார்ஜுனா குடும்ப விஷயங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை சோபிதாவை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சமீபத்தில் இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இப்படியான நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலி பாலாவின் திருமணம் குறித்து பல உண்மைகளை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.
அதில், நாக சைதன்யா குடும்பத்தில் அனைவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் தான். நாகார்ஜுனாவும் தொழிலதிபர் மகளை திருமணம் செய்து குழந்தை பிறந்த பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு தான் அமலாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல அவருடைய மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தா நடிகை இருந்த சமயத்தில் பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். சித்தார்த்துடன் சில நாட்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். தமிழ் கிறிஸ்தவ பெண்ணாக இருந்தாலும் நாக சைதன்யாவிற்காக இந்துவாக மாறி திருமணம் செய்து கொண்டார்.
நாக சைதன்யா மிகப் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமார் 2000 கோடி ரூபாய் சொத்து உள்ளது. இதனால் சமந்தாவை திருமணம் செய்த பிறகு நடித்து சம்பாதித்து தான் வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நிலையில் சமந்தா நடிக்க தான் செல்வேன் என்று அடம்பிடித்து நடிக்க சென்றுள்ளார். இதற்கு நாகர்ஜுனா குடும்பம் சம்மதம் தெரிவித்து உள்ளது. ஆனால் சமந்தா குழந்தை பிறந்து விட்டால் தொடர்ந்தே சினிமாவில் நடிக்க முடியாது என்பதற்காக அடிக்கடி கருத்தடை மாத்திரையை பயன்படுத்தி உள்ளார். இது ஒரு கட்டத்தில் குடும்பத்தினருக்கு தெரிந்த பிரச்சனையானதும் கொஞ்ச நாளைக்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதாக சமந்தா கூறியுள்ளார்.
அதையும் அவர்களுடைய வீட்டில் இருப்பவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் புஷ்பா படத்திற்காக சமந்தா ஆடிய பாடலில் பயங்கரமாக கிளாமர் காட்டி ஆடியதால் பலரும் நாகர்ஜுனாவை கேள்வி கேட்டுள்ளனர். இதனால் கடுப்பான நாகார்ஜுனா தனது மகனிடம் கூறி இந்த பொண்ணு நமக்கு வேண்டாம் என்று சொல்லி விவாகரத்து பெற கூறியுள்ளார். அதன் பிறகு தான் சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்தார். தற்போது நாக சைதன்யா திருமணம் செய்து கொண்டுள்ள சோபிதாவும் குறைந்தவர் கிடையாது. இவர் முன்னணி தெலுங்கு வில்லன் நடிகர் துலிபாலாவின் மகள்தான். சினிமாவில் தற்போது சில ஆண்டுகளாக நடித்து வருகின்றார்.
இவர் நாக சைதன்யாவை காதலித்ததற்கு முன்பே வேறொரு தொழிலதிபரை காதலித்து வந்துள்ளார். பிரணவ் மிஸ்ரா என்ற தொழிலதிபரை சோபிதா காதலித்து வந்த நிலையில் லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பிலும் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அவர்களுக்கு பிரேக்கப் ஆனதால் தான் நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்த விவகாரம் நாகார்ஜுனா குடும்பத்திற்கு தெரிய வந்தும் இதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமந்தா கவர்ச்சியாக நடித்ததாக சொல்லும் அளவுக்கு அதிகமாக சோபிதாவும் கவர்ச்சி காட்டக் கூடியவர் தான். இயக்குனர் 80 சதவீதம் கேட்டால் சோபிதா 90% கவர்ச்சி காட்டி நடிக்க கூடியவர். இதனால் மீண்டும் நாக சைதன்யா குடும்பத்தில் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளதாக பயில்வான் பற்ற வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…