Categories: CINEMA

அன்னைக்கு வடிவேலு அப்படி சொன்னதுனால தான் நான் இப்படி இருக்கேன்.. மனம் திறந்த பாவா லட்சுமணன்..!

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வளம் வரும் பாவா லட்சுமணன் சமீபத்திய பேட்டியில் வடிவேலு குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் பாவா லட்சுமணன். அதிலும் குறிப்பாக மாயி, அரசு, ஆனந்தம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி காட்சிகள் நடித்து பிரபலமாக இருக்கின்றார். அதிலும் வடிவேல் உடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கின்றார்.

சமீப காலமாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த இவர் சமீபத்தில் சர்க்கரை நோய் காரணமாக கால் கட்டைவிரல் அகற்றப்பட்டு மிகுந்த அவதிப்பட்டு வந்திருந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற போதிய வசதி இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கேபிஒய் பாலா உள்ளிட்ட ஒரு சில சினிமா பிரபலங்கள் உதவி செய்திருந்தார்கள்.

ஆனால் நடிகர் வடிவேலு மட்டும் எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. இது குறித்து அவரே சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சித்ரா லட்சுமணனுடன் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அதில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்த இவர் வடிவேலு குறித்தும் பேசியிருந்தார். முதன்முதலாக மாயி திரைப்படத்தில் நடித்த போது ஒரு பெரியவர் கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார்கள்.

ஆனால் என்னை பார்த்த இயக்குனர் மிக இளமையாகத் தெரிகிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்று கூறினார். உடனே சரத்குமார் அவர்கள் நாட்டமை படத்தில் அணிந்திருப்பது போன்ற ஒரு சட்டை மற்றும் முறுக்கு மீசை ஆகியவற்றை போட்டுக் கொண்டு வந்து பார்த்த உடனே வடிவேலு இவர்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனரிடம் ஸ்ட்ரிட்டாக கூறிவிட்டார்.

அதற்கு பிறகு தான் அந்த வாம்மா மின்னல் என்ற வசனம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படி தான் சினிமாவில் நான் அறிமுகமானேன். அன்று வடிவேலு மட்டும் அந்த கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று கூறவில்லை என்றால் நான் இப்படி இருந்திருக்க மாட்டேன் எனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே அவர்தான் என பெருமையாக பேசி இருந்தார்.

இருப்பினும் தன்னுடன் இருந்த சக நடிகர் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் அது எதையுமே வடிவேலு செய்யவில்லை. இவருக்கு மட்டுமல்ல இவருடன் பணியாற்றிய யாருக்குமே அவர் எந்த உதவியும் செய்யவில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடேங்கப்பா.. பேச மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு பேசிட்டீங்களே.. விருது விழாவில் மாஸ் காட்டிய விஜய்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…

1 மணி நேரம் ago

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…

2 மணி நேரங்கள் ago

நான் அந்த மாதிரி இல்ல.. வடிவேலுவுக்கு என் மேல இதனாலதான் கோபம்… கிசுகிசு மன்னன் பயில்வான் தம்பட்டம்!

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…

2 மணி நேரங்கள் ago

இந்தியன் படத்தில் அப்படி ஒரு விஷியம் இருக்கும்.. அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.. வைரலாகும் கமலின் த்ரோபேக் பேட்டி..

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே.…

2 மணி நேரங்கள் ago

அஜித்தை பார்த்து பயந்துட்டாரா நடிகர் சூர்யா.. கங்குவா திரைப்படம் தள்ளிப்போக இதுதான் காரணமா..?

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10…

3 மணி நேரங்கள் ago

ஆண்களுடன் தங்கியிருந்தேன்.. துணிமாற்ற கூட இடமில்லை.. சினிமாவில் நடிக்க பல கஷ்டங்களை சந்தித்த அர்ஜுன் ரெட்டி பட நடிகை..!

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்த ஷாலினி பாண்டே சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து தான் பட்ட கஷ்டத்தை…

3 மணி நேரங்கள் ago