திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி நகரை சேர்ந்தவர் நாகமலை. இவருக்கு லதா என்ற மனைவியும், திருமூர்த்தி (30) என்ற மகன் உள்ளான். இவர் வெள்ளக்கோவில் – தாராபுரம் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான நல்லெண்ணெய் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதத்தில் திருமணம் முடிவாகி இருந்தது. திருமூர்த்திக்கு வலிப்பு நோய் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எண்ணெய் ஆலையில் திருமூர்த்தி வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென்று நேற்று அதிகாலை 3 மணி அளவில் திருமூர்த்தி எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். சுமார் மூன்று அடி உள்ள எண்ணெய் தொட்டியில் பாதி அளவு எண்ணெய் இருந்துள்ளது. அதில் மூழ்கிய திருமூர்த்தியை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே திருமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள் . திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டு திருமூர்த்தி எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து என்று போலீசார் சந்தேக்கின்றனர் . தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் நிச்சியிக்கப் பட்டப் புதுமாப்பிள்ளை திருமணத்துக்கு முன்பே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…