வெளிநாட்டில் வேலை பார்த்து எப்படியாவது குடும்பத்தை முன்னேற்றிவிட வேண்டும் என்ற கனவோடு செல்லும் பலரது வாழ்க்கையில் ஒளிந்திருக்கும் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ரமேஷ் என்பவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆண்டுகளாக அரபு நாடு ஒன்றில் தங்கி உழைத்து வரும் ரமேஷ், அங்கு தனக்கு நேரும் அவமரியாதையை எண்ணி கண்ணீர் விட்டு அழுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
தான் யாருக்காக இத்தனை ஆண்டுகள் இரவு பகலாக உழைத்தாரோ, அதே முதலாளி தன்னை ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல், இழிவுபடுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். “வெளிநாடு சென்று சம்பாதித்தால் மட்டும் போதும், வாழ்க்கை செழிப்பாகிவிடும்” என்று நினைப்பவர்களுக்கு ரமேஷின் இந்த நிலை ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், அங்கு சுயமரியாதை இல்லாத போது அந்த உழைப்பு அர்த்தமற்றதாகிவிடுகிறது என்பதை அவரது கண்ணீர் உணர்த்துகிறது.
சொந்த மண்ணில் இரண்டு ரூபாய் குறைவாகச் சம்பாதித்தாலும், அது கௌரவமான வாழ்க்கையாக இருக்கும் என்பதே ரமேஷ் போன்றவர்களின் அனுபவப் பாடமாக இருக்கிறது. “நமது நாடு, நமது மண்” தரும் நிம்மதியும் பாதுகாப்பும் வேறு எங்கும் கிடைக்காது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அயல்நாட்டில் அடிமையாக வாழ்வதை விட, நம் ஊரில் மானத்தோடு வாழ்வதே மேலானது என்ற கருத்தை முன்வைத்து இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…