தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) உரிய அங்கீகாரம் மற்றும் மதிப்பளிக்கப்படாத காரணத்தால், அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் அதிரடியாக அறிவித்திருந்தார். இந்த அரசியல் நகர்வைத் தொடர்ந்து, அவர் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்த செல்வகுமார், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்குத் தனது கட்சியினர் அரும்பாடுபடுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது சில முக்கிய கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார். குறிப்பாக, தமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ சீரமைத்து, அதனை ‘முத்தரையர் மறுவாழ்வு திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்து அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள இவரது முடிவு, தேர்தல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…