தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க மாற்றுக் கட்சியினரையும், பல்வேறு அமைப்புகளையும் வளைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தொகுதி வாரியாக செல்வாக்கு மிக்க நபர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு தரப்பினர் அக்கட்சியில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அந்த வகையில், தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். இணைந்தவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதில் அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…
நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…
விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…
சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…
டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…