தற்போது வங்கிச் சேவைகள், புதிய சிம் கார்டு பெறுதல் மற்றும் அரசு நலத்திட்டங்கள் எனப் பல முக்கியமான பணிகளுக்கு ஆதார் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், ஒருவரின் கைரேகை அல்லது கருவிழித் தரவுகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மோசடிகளைக் குறைக்கவும் UIDAI புதிய ஆதார் செயலியில் பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களின் பயோமெட்ரிக் தகவல்களைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்க முடியும். இதனால், உங்கள் அனுமதியின்றி வேறு யாராவது உங்கள் ஆதார் எண்ணைப் பெற்றிருந்தாலும் கூட, உங்களின் கைரேகை அல்லது கருவிழியைப் பயன்படுத்தி எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. MeitY-ன் தகவல்படி, இதுவரை சுமார் 19.1 மில்லியன் மக்கள் இந்த பயனுள்ள பாதுகாப்பு வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.
இதைச் செய்ய, முதலில் புதிய ஆதார் செயலியைத் திறந்து உங்களது கணக்கில் லாகின் செய்ய வேண்டும். பின்னர் ஹோம் ஸ்கிரீனில் உள்ள ‘Biometric Lock’ அல்லது ‘Biometric Settings’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அடையாள சரிபார்ப்பை முடிப்பதன் மூலம் பயோமெட்ரிக்கை லாக் செய்யலாம். தேவைப்படும் நேரங்களில் ‘Unlock Biometric’ ஆப்ஷன் மூலம் அதைத் திறந்து சேவைகளைப் பயன்படுத்திய பின், மீண்டும் எளிதாக லாக் செய்துகொள்ளலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இணைந்து ஒரு…
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய…