மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகள் நிஹாரிக்காவுக்கும், சைதன்யா ஜன்னலகட்டாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உதய்பூர் அரண்மனையில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சோஷியல் மீடியாவில் புகைப்படம் மற்றும் வீடியோஸை பகிர்ந்து காதலை வெளிப்படுத்தினர்.
ஆனால் திருமணமான இரண்டே வருடத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரியும் முடிவுக்கு வந்தனர். இந்த ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிவதாக இருவரும் அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு தம்பதியினர் இருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாக இருக்கின்றனர்.
குறிப்பாக நிஹாரிகா திரைப்படங்களில் நடித்து வெப் சீரிசை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சைதன்யா பற்றி தெலுங்கு மீடியாக்களில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைத்த்தன்யாவுக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் சைதன்யாவின் குடும்பத்தினர் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போவதாகவும், பெரிய குடும்பத்து பெண்களை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.