தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், இழந்த செல்வாக்கை மீட்க அதிமுகவும் மல்லுக்கட்டும் நிலையில், அக்னி நியூஸ் சர்வீசஸ் நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியே 178 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, திமுக கூட்டணி 45.4% வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. அதிமுக கூட்டணி 35.3% வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் எனத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 11.5% வாக்குகளையும், சீமானின் நாம் தமிழர் கட்சி 5.6% வாக்குகளையும் அறுவடை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தவெக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சிகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற அதிரடித் தகவல் இந்தக் கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளது.
மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களை வாரிக்கொட்டி திமுக அசுர பலத்தைக் காட்டியுள்ளது. மத்திய மண்டலத்தில் 37-இல் 35 இடங்களையும், தென் மண்டலத்தில் 58-இல் 42 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் எனத் தெரிகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீலகிரி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக 100% வெற்றியைப் பதிவு செய்யும் எனத் தரவுகள் கூறுகின்றன.
தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியின் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணி பலம் மீண்டும் வெற்றியைத் தேடித்தரும் என அக்னி நியூஸ் சர்வீசஸ் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தையும், மற்ற கட்சியினரிடையே புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. களத்தில் நிலவும் உண்மையான நிலவரம் வாக்குப்பதிவு நாளில் தான் முழுமையாகத் தெரியவரும்.
அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…
ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…
தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…
தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…