Categories: TRENDING

நிறுவனம் கொடுத்த சம்பளம்… அதிர்ச்சியடைந்த நபரின் பரிதாபநிலை

வேலையை விட்டு நின்ற நபர் ஒருவருக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் சம்பளம் வழங்கிய விதம் கடும் வைரலாகிவருகிறது. அமெரிக்காவின் ஜோர்ஜா மாகாணத்தில் இருக்கும் வாகனம் பழுதுபார்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்துள்ளார் ஃப்ளாடென். இவர் சமீபத்தில் நிறுவனத்துடன் ஏற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக வேலையை விட்டு நின்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு கடைசியில் கொடுக்கப்படவேண்டிய சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது.

பலமுறை அவர் நிறுவனத்திடம் கேட்டும், அவர்கள் கொடுக்கவில்லை. இதனால் ஃப்ளாடென் இதுகுறித்து அமெரிக்க தொழிலாளர் துறையிடம் முறையிட்டுள்ளார். அவர்களும் இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட நிறுவனத்திடம் பேசி, மீதி தொகையை திருப்பி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அதன்படி ஃப்ளாடென் வேலை பார்த்துவந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஃப்ளாடென்க்கு தரவேண்டிய 915 அமெரிக்க டாலரை, சென்ட்டாக அதாவது 91,500 சென்ட்டாக திருப்பி கொடுத்திருக்கிறார். இந்த நாணயங்களை எடுத்துவர வழியில்லாமல் ஃப்ளாடென் ஒரு சக்கர நாற்காலியில் வைத்து எடுத்துவந்துள்ளார்.

மேலும் அந்த நாணயங்களில் கிரீஸ் படிந்து இருப்பதாகவும், கிரீஸ் படிந்திருக்கும் நாணயங்களை, தான் ஒவ்வொரு நாணயமாக சுத்தம் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும் எனவும் ஃப்ளாடென் கூறியுள்ளார். இந்த சம்பவமானது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Archana
Archana

Recent Posts

ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர்.. ஆனா அடுத்த படத்தில் 5000 ரூபாய்க்கு நடித்துக் கொடுத்த நல்ல மனிதர்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ…

37 mins ago

நான் உதவி பண்ணாதனால தான் சேஷு இறந்து போயிட்டாரா..? நடந்ததை வெளிப்படையாக சொன்ன சந்தானம்..!

விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில்…

40 mins ago

தன்னை ஓவர்டேக் பண்ணிய ஊர்வசியின் நடிப்பு… பொறாமையால் கன்னத்தில் அறைந்த ஹீரோ – பத்திரிக்கையாளர் பகிர்ந்த ஷாக் தகவல்!

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தங்கள் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி நடித்து கல்லா கட்டுவார்கள். பின்னர்…

1 hour ago

வசூலை வாரி குவித்த அரண்மனை 4.. சொல்லி அடித்த சுந்தர் சி.. இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா..?

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே மூன்றாம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே…

1 hour ago

காலத்தால் அழியாத கவுண்டமணி செந்திலின் வாழைப்பழ காமெடி… எங்க இருந்து அதை சுட்டேன் தெரியுமா?- கங்கை அமரன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பாவலர் பிரதர்ஸாக அறிமுகமாகிய இளையராஜா சகோதரர்களில் இளையராஜா போலவே பன்முகத் திறமை கொண்டவர் அவரின் தம்பி கங்கை…

2 hours ago

சிவாஜியோடு பல படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்த ஜெமினி கணேசன்… வருத்தப்பட்ட எம் ஜி ஆர்- ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி என்ற துருவங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் சைலண்ட்டாக இவர்கள் இருவருக்கும் இணையாக…

2 hours ago