Categories: CINEMA

நீங்க வாக்குக் கொடுத்துட்டு, இப்ப நான் கெஞ்சணும்னு எதிர்பாக்குறீங்களா… விஜயகாந்த் தாணுவின் பிரிவுக்கு இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார்.

விஜயகாந்தின் வளர்ச்சியில் அவர் கூடவே இருந்த இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்ட நண்பர்களின் பங்களிப்பும் மிக முக்கியம். விஜயகாந்துக்காக கதை கேட்டு படங்களை செட் செய்வது ராவுத்தர்தான். அவர் சொல்லிவிட்டால் மறுப்பில்லாமல் விஜயகாந்த் அந்த படத்தில் நடிக்கும் வேலைகளை தொடங்கிவிடுவாராம்.

ஆனால் இவர்களின் நட்பு வட்டத்துக்குள் வெளியாட்களை ராவுத்தர் நுழையவே விடமாட்டாராம். அதனால் கூட விஜயகாந்த் சில நல்ல நண்பர்களையும் படங்களையும் இழந்துள்ளார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்தோடு நெருக்கமான நட்பில் இருந்த தாணுவும் இப்படிதான் அவரிடம் இருந்து பிரிந்தாராம்.

தாணுவுக்கு வருசத்துக்கு ஒருபடம் பண்ணுவோம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் அவரோடு கூட்டணி அமைத்துள்ளனர். அப்படி உருவான படங்களில் ஒன்றுதான் புதுப்பாடகன் படம். இந்த படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் இயக்கி, இசையமைக்கவும் செய்தார் தாணு. ஆனால் படம் பெரியளவில் போகவில்லை.

அதனால் அடுத்த ஆண்டுக்கான தயாரிப்பாளர்கள் லிஸ்ட்டில் தாணுவின் பெயரை விஜயகாந்த் டீம் சேர்க்கவில்லையாம். இதைக் கேட்டு விஜயகாந்த் “ஏன்” என்று கேட்க, அவர் வந்து கேட்டால் நாம் இல்லை என்றா சொல்லிவிடுவோம் என சமாதானம் செய்துள்ளனர்

இந்த தகவல் தாணுவின் காதுக்கு சென்றுள்ளது. அதைக் கேட்டு கடுப்பான தாணு “வருடத்துக்கு ஒருபடம் பண்ணலாம் என சொல்லிவிட்டு, இப்ப நான் வந்து உங்ககிட்ட கால்ஷீட் கேட்கணும்னு சொன்னா எப்படி? நான் இனிமேல் விஜயகாந்தை வைத்து படமே பண்ணமாட்டேன்” எனக் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாராம். அதன் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லையாம்.

vinoth

Recent Posts

நமக்கு கொழந்த பொறந்தா யார் மாதிரி இருக்கும்… காதலை சொல்லும் முன்பே இப்படி பேசிய சுந்தர் சி… பயங்கரமான ஆளுதான்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள்…

17 நிமிடங்கள் ago

முகமூடி flop ஆகிடும்னு முன்பே கணித்தாரா சூர்யா?… க்ளைமேக்ஸ் எடுக்கும்போதே உஷாரான ஜீவா- மிஷ்கின் பிடிவாதத்தால் காலியான படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் மிஷ்கின். இவர் இயக்குனர்கள் கதிர் மற்றும் வின்செண்ட் செல்வா ஆகியோரிடம் உதவி…

33 நிமிடங்கள் ago

‘என்னது தனுஷுக்கு நான் அம்மாவா… அதெல்லாம் முடியாது’ – பொல்லாதவன் படத்தில் நடந்த சுவாரஸ்யங்களைப் பகிர்ந்த அஞ்சு!

நடிகை பேபி அஞ்சு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழில் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் குழந்தை…

53 நிமிடங்கள் ago

வசூலில் உச்சம் தொட்ட கல்கி 2898 Ad.. உலக அளவில் மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா..?

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2898 ad திரைப்படம் உலக அளவில் எவ்வளவு வசூல்…

1 மணி நேரம் ago

ஜீவா எனக்கு மாச, மாசம் 15,000 பணம் அனுப்பிடுவாரு.. அதுக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்து பேசிய நடிகர் பாவா லட்சுமணன்..!(

நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.அதிலும் மாயி படத்தில் வாம்மா…

2 மணி நேரங்கள் ago

ஷங்கர் சார் படத்துல அந்த கேரக்டர் நான் பண்ணவேண்டியது… ஆனா அதுக்காக நான் வருத்தப்படல- நண்டு ஜெகன் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

தமிழ் சினிமாவில் அயன் படம் மூலமாக நல்ல பிரபல்யம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தி மேலே வர முடியாமல் தனக்கான இடத்துக்காகப்…

2 மணி நேரங்கள் ago