மதுரை முத்து திருமணமான ஒருவரை முதல் திருமணம் செய்து கொண்டது ஏன்?… அவரே முதன்முதலாக கூறிய காரணம் இதோ!…

By Begam

Published on:

காமெடி நடிகரான மதுரை முத்து ஏற்கனவே திருமணம் ஆன தனது முதல் மனைவியை மறுமணம் செய்து கொண்டதை பற்றி சமீபத்தில் கூறிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மதுரை முத்துவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மிகவும் பாப்புலரான ஒருவராக இருந்து வருகிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார்.

   

 

இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.

 

காமெடி நடிகரான மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2016ல் கார் விபத்து ஒன்றில் லேகா  உயிரிழந்தார். இவரது மனைவியின் மறைவுக்கு பின்னர் தனது 32 வது வயதில் தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவர் தனது முதல் மனைவி குறித்து ஒரு பேட்டியில் கூறும் பொழுது, ‘என் முதல் மனைவிக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவர் இல்லாமல் அவர் படம் கஷ்டத்தை கண்டு வருத்தப்பட்டேன். நான் உங்களை திருமணம் செய்து கொள்ளலாமா எனக் கேட்டேன். இரண்டாவது திருமணம் என்பதால் வீட்டில் சம்மதிக்கவில்லை. பல எதிர்ப்புகளுடன் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.