#image_title
தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
80 களின் இறுதியில் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் அதன் பின்னர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களாகவே நடித்துத் தள்ளினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் அதிகமாக பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் இயக்கத்தில் அதிகமாக படங்களில் நடித்தது.
அப்படி திரைப்பட கல்லூரி மாணவராக இருந்து விஜயகாந்த் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர்தான் செல்வமணி. அவர் இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் 9 தோல்வி படங்களுக்கு பிறகு விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார் செல்வமணி.
இதையடுத்து அவரை அழைத்து மணிரத்னத்தின் அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த படத்துக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார் செல்வமணி. ஏனென்றால் அவர் இயக்கிய புலன் விசாரணை படத்துக்கு அவருக்கு சம்பளமே 14 ஆயிரம் ரூபாய்தானாம்.
இதையடுத்து சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த அவருக்கு இப்ராஹிம் ராவுத்தரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அடுத்த படமும் நாமே பண்ணலாம் என சொல்லியுள்ளார். அவரிடம் ஜிவியிடம் அட்வான்ஸ் வாங்கியுள்ளேன் எனக் கூறியுள்ளார். அதை திருப்பி கொடுத்துவிடு நாம்தான் அடுத்த படம் பண்ணுகிறோம் எனக் கூறியுள்ளார். அந்த படம்தான் கேப்டன் பிரபாகரன். அந்த படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய்தானாம்.
இதுபற்றி பேசிய செல்வமணி “விஜயகாந்த் ஆபிஸ்ல நல்லா சாப்பாடு போடுவாங்க. கார் வசதி எல்லாம் செய்து கொடுப்பாங்க. ஆனா சம்பளம் கம்மிதான். அது நம்மவீடு மாதிரிதான்” எனக் கூறியுள்ளார். ஆனாலும் விஜயகாந்த் தனக்கு முதல்படம் கொடுத்த காரணத்தால் அந்த நன்றிக் கடனுக்காக குறைந்த சம்பளத்திலேயே கேப்டன் பிரபாகரன் இயக்கியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…