மறைந்த கணவர் குறித்து உமா வெளியிட்ட எமோஷனல் பதிவு… ”என்னுள்ளே நான் உன்னை உணர்கிறேன்”… வைரலாகும் பதிவு இதோ…

By Begam

Published on:

மறைந்த நடிகர் சேதுராமன் அவர்களின் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக  அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். எம்பிபிஎஸ் எம்டி படித்த இவர் மும்பை மற்றும் சிங்கப்பூரில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2016ல்  திருமணம் முடிந்தது. உமையாள் என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

   

இப்படத்திற்கு பிறகு இவர் வாலிப ராஜா, சக்கபோடு  போடு ராஜா மற்றும் 50|50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சந்தானமும் சேதுராமனும் நெருங்கிய நண்பர்கள். இவர் மருத்துவராக பயிற்சி பெற்றிருந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருப்பதை கண்டுபிடித்து இவர் நடிகராக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டும் மருத்துவ வேலை செய்து கொண்டும் தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் 2020ல் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். தற்பொழுது இவரது மனைவி உமையாள் தனது கணவர் தொடங்கிய மருத்துவமனையை கவனித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கணவர் பற்றி எப்பொழுதும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது அவர் எமோஷனலான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, ”இன்று உணர்ச்சிகள் அதிகமாக இருந்தது.

நீங்கள் என்னருகில் இருப்பதை என் மூளை ஒரு நிமிடம் உணர்ந்தது. என்னுள்ளே நான் உன்னை உணருகிறேன். நீங்கள் இல்லாத என் வாழ்க்கையை நான் இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Uma (@uma.sethuraman)