95வது ஆஸ்கர் விருதுகள் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது விழாவில் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்ட படைப்புகள் போட்டியிட்டன. அதில் இந்தியாவின் சார்பில் ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து நாட்டு நாட்டு பாடல், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ், ஆல் தட் ப்ரீத்ட் ஆகியவை போட்டியிட்டன. முதலில் தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து போட்டியிட்ட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் பங்கேற்ற நிலையில் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
அந்த வகையில் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப் படத்தில் இடம் பெற்ற ரகு எனும் யானைக் குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெல்லி தம்பதியர்கள் சந்தித்தனர்.
இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டுக் கேடயமும், பொன்னாடையும் அணிவித்து தலா ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்களும் , வீடீயோக்களும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ….
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2000 ல் குழந்தை நட்சத்திரமாக…
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட பல சீரியல்கள்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின்…
நமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை வலதுசாரி, இடதுசாரி என இரண்டாக பிரித்து அறியும் வழக்கம் உண்டு. பொதுவாக மத…
பிரபாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கல்கி. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பக்தானி உள்ளிட்ட…
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்கியலட்சுமி இடம்…