நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதுவரை ஜெயிலர் படம் 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனதால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கலாநிதிமாறன் பரிசுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார். அதன்படி ரஜினியின் வீட்டிற்கு சென்ற கலாநிதி மாறன் இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காண்பித்து எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.
இதே போல அனிருத் மற்றும் நெல்சன் ஆகியோருக்கும் கார்களை பரிசாக கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் கலாநிதி மாறன் இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் ஆகிய மூன்று பேருக்கும் ஒரு காசோலை கொடுத்துள்ளார். அந்த காசோலையில் அப்படி எவ்வளவு ரூபாய் தான் கலாநிதிமாறன் கொடுத்திருப்பார் என அனைவரிடமும் குழப்பம் நிலவியது.
தற்போது அந்த காசோலையில் எவ்வளவு ரூபாய் இருந்தது என்பது குறித்து தகவல் லீக் ஆகியுள்ளது. அதன்படி இயக்குனர் திலீப் குமாருக்கு 5 கோடி ரூபாயும், அனிருத்துக்கு 2 கோடி ரூபாயும் காசோலையில் இருந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்துக்கு கொடுத்த காசோலையில் 30 கோடி ரூபாய் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…