தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை, தொடங்கி இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகை சிவகார்த்திகேயன். இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து அவர் மெரினா, 3 ,மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் என்று பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் அவ்வப்போது குடும்பம், ரசிகர்கள், நண்பர்களுக்கு என நேரத்தை ஒதுக்கி வருகிறார்.
அதுபோல தற்சமயம் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். தான் தாமதமாக வந்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மைதிரி – எனும் நட்பு திருவிழா நிகழ்ச்சி செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது இதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை யாஷிகா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இவர்கள் இருவரையும் கண்ட மாணவர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக சற்று தாமதமாக வந்த சிவகார்த்திகேயன் தான் தாமதமாக வந்ததற்காக மாணவர்களிடம் மன்னிப்பு கூறியுள்ளார்.காலையிலிருந்து சூட்டிங்கில் ஈடுபட்டிருந்ததால் மிகக் களைப்பாக இருந்ததாகவும், மாணவர்களை பார்த்தவுடன் உற்சாகம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிவகார்த்திகேயனை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
புகைப்படங்கள் வீடியோக்கள் என ரசிகர்களால் அதிகம் எடுக்கப்பட்டது. தற்பொழுது அந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அதில் சில உங்களுக்காக…
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…