#image_title
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தனது கணவருடன் சேர்ந்து மலிவு விலையில் தங்கம் என்று மோசடி செய்த வழக்கில் போலீசார் விசாரணை செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழர்களுக்கு பரிச்சயமானவர். 49 வயதான நிலையிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு சினிமாவில் கலக்கி வருகின்றார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. இவர் இடையில் ஆபாச படங்கள் எடுத்து அதனை பிரத்தியேக செயலி மூலம் ஒளிபரப்பிய குற்றச்சாட்டுக்காக அண்மையில் கைதானார்.
இதன் மூலமாக மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து சமீபத்தில் தான் ராஜ் குந்த்ரா ஜாமினில் வெளியானார். இந்நிலையில் தற்போது இவர் மீது வைக்கப்பட்ட மற்றொரு புகார் விசாரணைக்கு வந்துள்ளது. சில வருடத்திற்கு முன்னர் சத்யுப் கோல்ட் என்கின்ற தங்கத்திட்டங்களுக்கான ஒரு நிறுவனத்தை ஷில்பா மற்றும் ராஜகுந்திரா தம்பதியினர் தொடங்கியிருந்தார்கள்.
இதன் மூலம் ஏரி இறங்கும் தங்கத்தின் விலை குறித்து கவலைப்படாமல் சொக்க தங்கத்தை பெற முடியும் என்று கூறினார்கள். மலிவு விலையில் தங்கம் கிடைக்கும் என்று நம்பி பலரும் இதில் பணம் போட்டார்கள். இந்த வாக்குறுதியை நம்பி தங்க வர்த்தகரான கோத்தாரி என்பவர் 90 லட்சம் வரை முதலீடு செய்திருந்தார். மேலும் முதலீடு காலத்தில் கூடுதல் லாபத்துடன் தங்க கட்டிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள் இந்த பாலிவுட் தம்பதிகள்.
இதனால் அதனை நம்பி கோத்தாரி பல நாட்கள் காத்திருக்கின்றார். ஆனால் முதிர்வு நாளான 2019 ஏப்ரல் 2 தினத்தை கடந்த பிறகும் ஷில்பா மற்றும் ராஜ் தம்பதி சொன்னபடி தங்கத்தை வழங்காமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்தனர். தங்கம் தரவில்லை என்றாலும் தான் கட்டிய தொகையாவது திருப்பிக் கொடுங்கள் என்று கோத்தாரி கேட்டபோதும் ஷில்பா தரப்பிலிருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து காவல்துறையினரிடம் கோத்தாரி புகார் அளித்தார். தன்வசம் இருந்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்தார். அதன் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்வதாக கூறி இருந்த நிலையில் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதனால் தனது புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொள்ளாத காரணத்தினால் மும்பை நீதிமன்றத்தை நாடினார் கோத்தாரி.
இதனை விசாரித்த சென்சஸ் நீதிமன்றம் கோத்தாரியின் புகாரை உடனடியாக உரிய முறையில் விசாரித்து தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எம்எல்எம் திட்டத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ராஜ் குந்த்ரா அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணையில் சிக்கினார்கள்.
ஷில்பா ஷெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த மும்பை பிளாட் உள்ளிட்ட 97 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினார்கள். அது மட்டும் இல்லாமல் சினிமா ஆசை காட்டி பல இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிரபலங்களும் தங்கள் வாழ்க்கையை கெடுத்து விட்டதாக புகார் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…