#image_title
விஜே தனுஷிக் விஜயகுமார் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர். இவர் அங்கு மீடியா துறையில் வேலை பார்த்துள்ளார். பின்னர் தன் வாழ்வில் பெரிய லட்சியங்களை அடைய வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளார். அங்கு தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து விஜே தனுஷிக் விஜயகுமார் ஒரு இன்டர்வியூவில் கூறியுள்ளார். விஜே தனுஷிக் விஜயகுமார் கூறியதாவது, நான் வாய்ப்பு தேடி முதலில் சென்னைக்கு வந்தபோது வாய்ப்பு கிடைக்கவில்லை.
நான் ஸ்ரீலங்காவில் இருக்கும் போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கொரோனா காலகட்டம் என்பதால் என்னால் வர முடியவில்லை. இதனால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன். அதன் பிறகு நான் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது வாய்ப்பு கிடைக்காமல் சாப்பாடு தூக்கம் இல்லாமல் தவித்தேன். அதன் பிறகு தான் அன்பே வா சீரியலில் ஜோதி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த சிறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதன் பிறகு நீ நான் காதல் சீரியலில் நடித்தேன். பின்னர் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்தேன். எனது தோழியின் வீட்டில் தங்கி இருந்து தான் வாய்ப்பு தேடி அலைந்தேன். ஒரு முறை பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் வேலைக்கான ஆடிஷன் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். நான் அப்போது கொஞ்சம் chubby- ஆக இருப்பேன்.
அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக வேலை பார்க்க நான் குண்டாக இருந்ததால் சர்ஜரி பண்ணிட்டு வரீங்களா அப்படின்னு கூட என்னிடம் கேட்டார்கள். வாய்ப்பு இல்லை என்று கூறிவிட்டால் பரவாயில்லை. சர்ஜரி பண்ணிட்டு வருமாறு கூறியது தான் வேதனை. உருவ கேலி செய்வதை நினைத்து வருந்தினேன். பின்னர் நினைத்து ஆட்டோவில் உட்கார்ந்து அழுதேன். தவறான முடிவு எடுத்து விட்டோமோ என நினைத்தேன். அதன் பிறகு தான் அன்பே வா சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்து. இப்போது அடுத்த அடுத்த சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…