Categories: CINEMA

பிக் பாஸ் வீட்டில் கமலை பற்றி அவதூறாக பேசிய விக்ரமின் தந்தை.. அவர் வெளியேற இது தான் காரணமா..? அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 இப்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. ஏறக்குறைய இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த நிகழ்ச்சிக்கு முடிவுக்கு வந்துவிடும். இப்போதைய சூழலில் நான்கு பேரில் ஒருவர்தான் டைட்டில் வின்னராக வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதில் மிக முக்கியமாக விசித்ரா மற்றும் அர்ச்சனா பெயர்கள் அடிபடுகின்றன. இதுவரை 35 வயதுக்கு மேற்பட்ட யாருக்கும் டைட்டில் வின்னர் வழங்கப்படவில்லை. மேலும், கடந்த 6 சீசன்களில் ரித்விகா ஒருவர் மட்டுமே பெண் போட்டியாளராக டைட்டில் வின்னர் வென்றுள்ளார். அதனால் 50 வயது நெருங்கியவர், மிகவும் தகுதி வாய்ந்த நபராக இருப்பவர் என்ற அடிப்படையில் இந்த முறை 90 சதவீதம் விசித்ரா தான் டைட்டில் வின்னராக இருப்பார் என்றும் தகவல் பரவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பாண்டியன் ஸ்டோர் சரவணன் விக்ரமுக்கு, பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் சர்ச்சை மற்றும் விமர்சனங்களுக்கு ஆளாகவில்லை. ஓரளவுக்கு நியூட்ரலாக நடந்துக்கொண்டார். இந்த நிலையில், நேற்று திடீரென அவர் வெளியேற்றப்பட்டார். ஓட்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில் அவர் குறைந்த வாக்குகளை பெற்றதால் அனுப்பப்பட்டாலும் உண்மையில், சரவணன் விக்ரம் வெளியேற்றத்துக்கு காரணம், கமலை பற்றி அவதூறாக பேசியதுதான் என்று தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

அதாவது கடந்த வாரத்தில், பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் வர அனுமதிக்கப்பட்டது. அப்போது வந்த சரவணன் விக்ரமின் தந்தை, அங்கிருந்த மாயாவை பார்த்து, என் மகனுக்கு அழகாக பார்த்து பார்த்து பெயர் வைத்திருக்கிறோம். நீ எப்படி காக்ரோச், காக்ரோச் என என் பையனை கூப்பிடலாம்? அவனை பார்த்தால் கரப்பான்பூச்சி மாதிரியா இருக்கிறான், என்று கோபமாக கேட்டார். இல்லை அங்கிள், சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொல்கிறோம் என மாயா சமாளித்தார். அதற்கு பதிலளித்த சரவணன் விக்ரமின் அப்பா, நீ சொல்றதை எல்லாம் வாரக்கடைசியில வர்ற கமல்ஹாசன் வேண்டுமென்றால் நம்பீட்டு போவார். நான் நம்ப மாட்டேன். நான் உங்கள் நடவடிக்கை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், என்றார். இதன்மூலம் மாயா என்ன சொன்னாலும் கமல் கேட்டுக்கொள்வார் என்று அவதூறாக கமல் பற்றிய அவர் பேசிய காரணத்தால்தான், சரவண விக்ரமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டதாக, நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

Sumathi
Sumathi

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

5 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

6 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

7 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

12 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

12 மணி நேரங்கள் ago