நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இன்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, விஜயகாந்த் நினைவிடத்துக்கு நானும் அம்மாவும் போயிருந்தோம். அப்படியே விஜயகாந்த் இல்லத்துக்கும் சென்றோம். அங்கு பிரேமலதா, விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷ் மற்றும் பிரேமலதாவின் சகோதரிகள், உறவினர்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது, சண்முகபாண்டியன் ஹீரோவா பண்ணிட்டு இருக்கார். நீங்கள் எல்லாம் பார்த்துக்கணுமுன்னு ஒருவார்த்தை சொன்னாங்க. அந்த வார்த்தை என்னை ரொம்ப பாதிச்சது. ஏன்னா, விஜயகாந்த் எவ்வளவோ பேருக்கு, என்னென்னவோ உதவிகள் செய்திருக்கார். ஹீரோக்கள் வளர்ச்சிக்கு உதவி செய்திருக்கிறார். தர்ம காரியங்கள் நிறைய பண்ணியிருக்கார்.
அப்படிப்பட்ட அவரது மகன்களுக்கு ஏதாவது பண்ணவேண்டும் என்று என் மனதில் தோன்றிக்கொண்டே இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கண்ணுப்படப் போகுதய்யா படத்தில், மூக்குத்தி முத்தழகி, மூனாம்பிறை பொட்டழகி பாட்டுக்கு அவருக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டரா இருந்து, கோடியோகிராப் செய்தேன். ரொம்ப அழகா ஆடியிருப்பார். அப்படிப்பட்ட அவர் பையன்களுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். அதற்காக சண்முகபாண்டியன் நடித்த படம் ரிலீஸ் ஆகும் போது, விஜயகாந்த் மீது வைத்த அன்பின் வெளிப்பாடாக ஏதாவது செய்ய வேண்டும். அந்த படத்துக்கு நல்ல ஓப்பனிங் கொடுக்க வேண்டும், முடிந்த அளவுக்கு பப்ளிசிட்டி தேடித்தர வேண்டும் என நினைக்கிறேன்.
அதுமட்டுமின்றி, அந்த படக்குழுவினர் ஒத்துக்கொண்டால் சண்முக பாண்டியன் நடிக்கிற படத்தில், நான் கெஸ்ட் ரோல் பண்ண தயாராக இருக்கிறேன். ஒரு பாட்டு சீன், பைட் சீன்ஸ், டான்ஸ் இல்லே ஏதாவது ஒரு சீன் கெஸ்ட் ரோலா பண்ண தயாராக இருக்கிறேன். படக்குழு நான் என்ன பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதை செய்து தர நான் தயாராக இருக்கிறேன். எத்தனையோ பேரை விஜயகாந்த் வளர்த்து விட்டுள்ளார். அவரது பையன் வளர்வதை நாமும் பார்க்க வேண்டும். அது அவருக்கு நாம் செய்கிற நன்றியாக இருக்கும். அதுமட்டுமின்றி யாராவது ரெண்டு சப்ஜெக்ட் ஹீரோ கதை இருந்தாலும் சொன்னால், நானும் சண்முகபாண்டியனும் சேர்ந்து நடிக்க ரெடியாக இருக்கிறேன். விஜயபிரபாகரன் அரசியலில் ஆர்வமாக இருக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள் என்று அந்த வீடியோவில்கூறியிருக்கிறார் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…