தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்பொழுது இவர் தனது 50 வது படமான ‘ராயன்’ படத்தின் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் தனுஷ். இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே பிக் பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஜோடி இணைந்து நடித்து திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இந்நிலையில் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதைக்களம் நடிகர் தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், தகுந்த நேரத்திற்காக காத்திருப்பதாகவும் இயக்குனர் இளன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும், விரைவில் இந்த படம் குறித்து புதிய அப்டேட்டுகள் வெளியாகும் என தெரிகிறது. இத்திரைப்படம் நடிகர் தனுஷுக்கு கைகொடுக்குமா..? இல்லை காலை வாரிவிடுமா..? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.…
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…