தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் போண்டா மணி. வடிவேலு, விவேக் நடித்த படங்களில் அவர்களுடன் காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். குறிப்பாக சுந்தரா டிராவல்ஸ் படத்தில், புதுமாப்பிள்ளையான இவருக்கு முரளி, வடிவேலு மிக அசிங்கமாக மாப்பிள்ளை அலங்காரம் செய்து அழைத்து வருவது சிறந்த காமெடியாக அமைந்தது. அதே போல் கண்ணும், கண்ணும் படத்தில் குளத்தில் இருந்து எழுந்து ஓடிவரும் போண்டாமணியை, போலீஸ் துரத்தும். அப்போது வடிவேலுவிடம், என்னை பத்தி என்ன கேட்டாலும் சொல்லிராதீக, அடிச்சு கேட்பாங்க, அப்பவும் சொல்லிராதீக என சொல்லிக்கொண்டே ஓடுவதும் டிரெண்டிங் காமெடியாக அமைந்தது.
தமிழ் படங்களில் பிஸியாக பல படங்களில் நடித்துவந்த போண்டாமணிக்கு, திடீரென சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய போண்டாமணி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். 2 தினங்களுக்கு ஒருமுறை போண்டாமணி மருத்துவமனைக்குச் சென்று டயாலைசிஸ் செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். இது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இலங்கை அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்த போண்டாமணி, பாக்யராஜ் மூலம் பவுனு பவுனுதான் படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போண்டா மணி மறைவுக்கு சினிமா நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு நடிகர் மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது அங்கு இருந்த காமெடி நடிகர் பெஞ்சமின் உள்ளிட்ட சிலர், ஆவேசமாக சத்தமிட்டனர். போண்டா மணியை கடைசி காலத்தில் யாருமே கண்டுகொள்ளவில்லை. யாரும் பக்கத்தில் சேர்க்கவில்லை. ஆனால் மன்சூர் அலிகான் தன் வீட்டு மாடியில் 10 ஆண்டுகள் போண்டாமணி தங்குவதற்கு வீடு கொடுத்தார்.
தனது படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார். சாப்பாடும் கொடுத்த நல்ல மனிதர் என ஆவேசமாக குரல் எழுப்பினர். குறிப்பாக நடிகர் பெஞ்சமின் ஆவேசமாக பேசினார். அவரை சமாதானப்படுத்திய மன்சூர் அலிகான், போண்டாமணிக்கு அமைதியாக அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…