Categories: CINEMA

லோகேஷ் கனகராஜன் சின்மையும் செய்த காரியத்தால் பல லட்சம் நஷ்டம்.. பரபரப்பை கிளப்பிய டப்பிங் யூனியன் துணைத் தலைவர்..

பிரபல நடிகர் ஆன ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக நடிகர் ராதாரவி தலைவராக இருந்து வரும், டப்பிங் யூனியனுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ‘என்னால் முடியவில்லை, எனவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ என முதலில் ராதாரவி ஒதுங்கியதாகச் சொல்கிறார்கள். எனவே அவருடைய ஆதரவில் கதிரவன் என்பவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் அவர் நின்றால் ஜெயித்து விடலாமென எண்ணிய கதிரவன் பின்வாங்க, மீண்டும் ராதாரவியே தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதென முடிவெடுத்திருக்கிறாராம். நாற்பதாண்டு காலம் உடன் பயணித்தவரை எதிர்த்துப் போட்டியிடுவது மற்றும் டப்பிங் யூனியன் கட்டிட விவகாரத்தில் நடந்ததென்ன, சின்மயிக்கும் யூனியனுக்குமான பிரச்னை என பல்வேறு விஷயங்கள் குறித்து ராஜேந்திரனிடம் பேசினோம்.
”நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடலை. அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடாததைப் பயன்படுத்தி சங்க உறுப்பினர்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாத சிலர் பொறுப்புக்கு வர முயற்சி செய்தாங்க.

அது பத்தி அவர்கிட்டப் பேசினேன். ‘நீ வேணும்னா தலைவர் பதவிக்குப்  போட்டியிடு’னு அவர்தான் சொன்னார். சரின்னு நான் இறங்கிட்டேன். நான் சொன்ன அந்த சிலருக்கு இப்ப தோல்வி பயம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன். அதனால திரும்ப அவர்கிட்டப் போய் பேசியிருக்காங்க. என்னைப் பொறுத்தவரை இனி நான் என் முடிவுல இருந்து பின்வாங்குறதா இல்லை. ஏன்னா, தேவையில்லாத எவ்வளவோ பிரச்னைகளை சங்கம் சந்திச்சிட்டிருக்கு. அதுக்கெல்லாமே நான் குறிப்பிடுகிற அந்த ஒரு கும்பல்தான் காரணம். அண்ணன் ராதாரவி அவங்க பேச்சை மட்டுமே கேட்கறதால முன்ன இருந்த ஆளுமை அவர்கிட்ட இப்ப இல்லை. அதனாலதான் இந்தப் போட்டி தவிர்க்க முடியாததாகிடுச்சு”.

”கட்டிட விவகாரத்துல நிர்வாகத்துக்குள் இருந்துகிட்டே நான் நியாயமாகத்தான் குரல் கொடுத்தேன். யாரும் அதுக்குக் காது கொடுக்கல. கட்டிடம் கட்டி வாடகைக்கு விடலாம்னு சொன்னாங்க. பார்க்கிங் வசதி இல்லாம யார் வாடகைக்கு வருவாங்க? அதனால வாடகைக்கு யாரும் வரலை. மாநகராட்சி நடவடிக்கையைப் பொறுத்தவரை நிர்வாகத்தின் அலட்சியப் போக்குக்குக் கிடைச்ச தண்டனை. இப்ப நிலைமையை சரி பண்ணிட்டு வர்றோம். அடுத்த நிர்வாகம் வரும் போது கட்டிட விவகாரத்துல நல்லதொரு முடிவு எட்டப்பட்டிருக்கும். ”சின்மயி சாதாரண உறுப்பினராச் சேர்ந்தாங்க. சந்தா புதுப்பிக்கச் சொன்ன போது ‘நான் லைஃப் மெம்பர்; சந்தா புதுப்பிக்கத் தேவையில்லைனு சொன்னாங்க. அவர் சந்தா செலுத்தாதால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப் பட, விவகாரம் கோர்ட்டுக்குப் போச்சு. கோர்ட் சங்க நடவடிக்கை சரியேன்னு தீர்ப்பு தந்திடுச்சு.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

எனக்கும் என் மாமியாருக்கும் ரொம்ப சண்டை வரும்.. ஆனா தினமும் அத மட்டும் மிஸ் பண்ண மாட்டாங்க.. மனம் திறந்து பேசிய குஷ்பூ..!!

பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…

6 மணி நேரங்கள் ago

16 வயதில் ஏற்பட்ட தாக்கம்.. போயஸ் கார்டனில் 150 கோடியில் பிரம்மாண்ட வீடு.. பின்னணி குறித்து மனம் திறந்த தனுஷ்..

நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…

6 மணி நேரங்கள் ago

கவர்ச்சியில் பாலிவுட் நடிகைகளை ஓரங்கட்டிய அட்லியின் மனைவி பிரியா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

6 மணி நேரங்கள் ago

ஆடிய ஆட்டம் என்ன..! புது மாப்பிள்ளை பிரேம்ஜியின் மனைவி வெளியிட்ட வீடியோ.. முரட்டு சிங்கிளாக இருந்தவருக்கு வந்த சோதனை..

புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…

7 மணி நேரங்கள் ago

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

12 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

13 மணி நேரங்கள் ago