தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என தொடர்ந்த பாரம்பரியத்தில் அடுத்ததாக வந்தவர் கவுண்டமணி. 80 களிலும் 90 களிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்.
கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் பலவும் பாடி ஷேமிங் செய்தல், பிறரை மரியாதை இல்லாமல் பேசுதல் என நெகட்டிவ் அம்சங்களைக் கொண்டிருந்தாலும் அவரின் நகைச்சுவைக் காட்சிகளுக்கு ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அதே போல தன்னால் முடிந்தவரை முற்போக்கான கருத்துகளையும் தன்னுடைய நகைச்சுவைகளில் கூற முயன்றார்.
திரையில் எப்படி கவுண்டமணி எப்படி கூட இருப்பவர்களை வரைமுறை இல்லாமல் கலாய்க்கிறாரோ, அப்படிதான் சக நடிகர்களையும் எந்த எல்லையும் வகுத்துக் கொள்ளாமல் ஜாலியாக கலாய்ப்பாராம். இதை சத்யராஜ், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்கள் மிகவும் ஜாலியாக எடுத்துக்கொண்டுள்ளனர். மேலும் அதை பல பேட்டிகளில் வெளிப்படுத்தியும் உள்ளனர்.
ஆனால் அவரின் இப்படிப்பட்ட கவுண்டர்கள் சில நேரங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துவம் உண்டு. அப்படிதான் பெரிய மருது பட ஷூட்டிங்கில் அவர் எஸ் எஸ் சந்திரனைப் பார்த்து சொன்ன ஒரு வார்த்தை அடிதடி வரை சென்றிருக்கிறது.
அப்போது எஸ் எஸ் சந்திரன் ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார். அதைக் குறித்து பேசிய கவுண்டமணி “இவன் கட்சியில ரெண்டே பேருதான். ஒன்னு இவன். இன்னொன்னு இவன் தலைவன்” எனக் கூறியுள்ளார். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாத எஸ் எஸ் சந்திரன் கவுண்டமணியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடிதடி வரை சென்று இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கட்டி உருண்டு சண்டையிட்டுக் கொள்ளும் அளவுக்கு சென்றுள்ளது.
பின்னர் சுற்றி இருந்தவர்கள் அவர்களை பிரித்து விட்டுள்ளனர். இதை அந்த படத்துக்கு நகைச்சுவை ட்ராக் எழுதிய சாய் ராஜகோபால் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…