கன்னடத்தில் 2014ல் வெளியான ‘உக்ரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரசாந்த் நீல். இதையடுத்து இவர் இயக்கிய KGF திரைப்படத்தை இந்திய சினிமாவே கொண்டாடியது. கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, அதே கூட்டணியில் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்ட இப்படம் , மூன்றே நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்ததன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்து இருக்கிறார் பிரசாந்த் நீல். தற்போது இவர் அடுத்தடுத்து இயக்க உள்ள திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி நடிகர் பிரபாஸை வைத்து’ சலார்’ 2-ம் பாகத்தை இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தின் சூட்டிங் ஜூன் அல்லது ஜூலையில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதை முடித்த பிறகு ஜூனியர் NTR ஐ வைத்து NTR31 முதல் பாகத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து KGF 3 தொடங்க இருப்பதாகவும், மேலும் நடிகர் அஜித்தை வைத்து AK 64 அல்லது AK 65 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…