நடிகர் கருணாஸ், லொடுக்கு பாண்டி என்றால் சட்டென நினைவுக்கு வந்துவிடுவார். காமெடி நடிகராக இருந்தவர் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி விட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், தமிழக சட்டசபையில் எம்எல்ஏ வாகவும் இருந்துவிட்டார். இப்போதும் சினிமா, அரசியல் என பயணித்துக்கொண்டு இருக்கும் நடிகர் கருணாஸ், சமீபத்தில் தன் மனைவி கிரேஸ் உடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றார்.
அப்போது கருணாஸ் கூறியதாவது, கிரேஸ்க்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் பேண்ட் சர்ட்டுதான். இப்போ சமீபத்தில்தான் கவுன் போடறாங்க. முதலில் கல்யாணம் ஆன சமயத்துல பேண்ட் சர்ட் தான் ரெகுலா போடுவாங்க. இடுப்பு வரைக்கும் தலைமுடி இருக்கும். நான் தான் தலைமுடியை வெட்டி விட்டேன். பாய்கட் பண்ணுனா பொம்பளைக்குள்ள ஒரு ஆண்மை தனம் வரும். நான்தான், நீ ஆம்பளை மாதிரி இருக்கணும். நாளைக்கு என்ன வேணா நடக்கலாம், எனக்கு ஏதாவது ஒண்ணு நடந்துடுச்சுன்னா, நீதான் எல்லாத்தையும் கவனிச்சக்கணும், சமாளிக்கணுமுன்னு சொல்லி, நானே தலைமுடியை வெட்டி விட்டுட்டேன், என்றார்.
அதுக்கு நான் உடனே ஒத்துக்கிட்டேன். ஏன்னா, எனக்கு தலைமுடி பின்னத் தெரியாது. கல்யாணம் வரைக்கும் அம்மாவோ, அக்காவோ தான் எனக்கு தலைமுடி பின்னி விடுவாங்க. அதனால், தலைமுடியை வெட்டுறதுக்கு உடனே நான் ஒத்துக்கிட்டேன் என கூறி இருக்கிறார் கிரேஸ். மேலும், என்னோட பேவரைட் டிரஸ் எப்பவுமே பேண்ட் சர்ட்தான். ஆனால், டிவி ஷோக்களில் கலந்து கொள்வதால் மற்றவர்கள் மாதிரி டிரஸ் பண்ண வேண்டிய கட்டாயம் இருப்பதால், கவுனுக்கு மாறி விட்டேன். நைட்டிக்கு பதிலாக கவுன் அணிவது சவுகரியமாக தான் இருக்கிறது என்றும் கிரேஸ் நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.