நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தின் நாயகன் சூர்யா தான். ஒரு கட்டத்தில் ஜோதிகாவுக்கு, வாழ்க்கையிலும் சூர்யா நிஜ நாயகன் ஆனார். ஜோதிகாவும் நாயகி ஆனார். இருவரது வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கோவை கொடிசியா மஹாலில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது. சென்னையில் தந்தை சிவக்குமாருடன் கூட்டுக்குடும்பமாக பல ஆண்டுகளாக இருந்த சூர்யா குடும்பம், இப்போது மும்பையில் செட்டில் ஆகி விட்டது. இந்தி, ஆங்கில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார் சூர்யா. ஜோதிகாவும் காதல் தி கோர் போன்ற மிக வித்யாசமான படங்களில், கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பல விஷயங்களை மனம் திறந்து ஜோதிகா பேசினார்.
அந்த நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியதாவது, முதலில் காதலை சொன்னது யார் என எனக்கு ஞாபகமே இல்லை. எங்களது 5 ஆண்டுகால நட்பு எப்போது காதலாக மாறியது என்பது எனக்கு புரியவே இல்லை. இப்பக்கூட என் பொண்ணு அடிக்கடி கேட்பாங்க. யார் முதலில் காதலை சொன்னதுன்னு. அது நிஜமாகவே ஞாபகம் வரலே. நாங்க நட்பே இருந்ததே ஒருகட்டத்துல ஸ்ட்ராங்கா அது மாறிடுச்சு. ரெண்டு பேருமே வெற்றியை நோக்கிதான் போனோம். அதை சந்தோஷமா இருவரும் பகிர்ந்துகிட்டோம். அப்போ நிறைய தடைகள் இருந்தது. அதை எல்லாம் தாண்டி, உடைச்சுதான் ஜெயிச்சோம். அதுல யார், யாருக்கு ப்ரப்போஸ் பண்ணினோமுங்கறது தெரியலை. உண்மையாக ஞாபகம் வரலை.
12 பி படத்துல நடிச்ச டைம்ல, அவர்மீது எனக்கு நிறைய ஆர்வம், கவனம் இருக்குதுன்னு நான் புரி்ஞ்சுக்கிட்டேன்னு நினைக்கறேன். சூர்யா, 12 பி படத்தை தியேட்டர்ல போய் பார்த்தாங்க. நான் நந்தா படத்தை தியேட்டர்ல போய் பார்த்தேன். அப்ப ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை, பாராட்டறதுன்னு இருந்தோம். அப்போ தியேட்டர்ல போய் இருந்துட்டு, சூர்யாவுக்கு பெரிய படம் ஒன்றை பார்க்க போறேன்னு சூர்யாவுக்கு நான் மெசேஜ் செஞ்சேன். அந்த காலகட்டம்தான் நாங்க காதலர்களாக மாறியதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…