#image_title
ஆரம்ப காலகட்டத்தில் நாடகங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் பாக்கியராஜ் மூலமாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் கவுண்டமணிக்கு முக்கிய இடம் கிடைத்தது. அதற்கு காரணமும் பாக்யராஜ் தான்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த கவுண்டமணி ஒரு காலகட்டத்தில் செந்திலையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தனி ட்ராக் ஒன்றை உருவாக்கி காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதாவது படத்தில் கதைக்கும் இவரின் காமெடிக்கும் சம்பந்தமே இருக்காது. தனியாக கவுண்டமணி செந்தில் காமெடி படத்தின் இடையிலேயே வைக்கப்பட்டிருக்கும்.
ஒரு கட்டத்தில் கவுண்டமணியின் காமெடி மிகப் பெரிய வரவேற்பை கொடுக்க ஹீரோக்களின் நண்பர்களாக நடிக்க தொடங்கினார். ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்ட முதல் நடிகர் இவர்தான். 90களில் பல படங்களின் வெற்றிக்கு கவுண்டமணி காரணமாக இருந்தார். அவருக்கு டிமாண்ட் அதிகரிக்க ஹீரோவுக்கு சமமான கதாபாத்திரம் கொடுக்க வேண்டும்.
சம்பளம் கொடுக்க வேண்டும். தனக்கென ஹீரோயின் இருக்க வேண்டும். பாடல் மற்றும் சண்டைக் காட்சி இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தவர். அது எல்லாமே அவருக்கு கிடைக்கவும் செய்தது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை இதில் சரத்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இப்படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகளும் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். வயதான அப்பாவாக செந்தில் நடிக்க அவருக்கு மகனாக கவுண்டமணி நடித்து அசத்தியிருப்பார். இந்த படம் குறித்த சமீபத்திய ஊடகம் ஒன்றில் பேசியிருந்த கேஎஸ் ரவிக்குமார் அப்படத்தின் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் . மேலும் அந்த திரைப்படத்தில் எனக்கும் , சரத்குமாருக்கும், கவுண்டமணிக்கும் ஒரே சம்பளம் தான். நாங்கள் எல்லோரும் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கினோம் என்று அவர் கூறியிருப்பார். இதை கேட்ட பலரும் நடிகருக்கு சமமாக சம்பளம் வாங்கியவர் கவுண்டமணி என்று பெருமையாக கூறி வருகிறார்கள்.
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…