#image_title
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பகால கட்டம் அது. சில படங்களில் கிடைத்த கேரக்டர்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வருகிறார். தலைமுடியை எப்போது கோதிவிட்டுக் கொள்வது, சிகரட்டை தூக்கி பிடிப்பது, புரியாத தமிழில் பேசுவது, கர்நாடகாவில் இருந்து வந்த புதுமுக நடிகர் என்ற விமர்சனங்களே துவக்கத்தில் ரஜினி மீது அதிகமாக இருந்தது. அதுவும் லட்சங்களில் அவர் சம்பளம் வாங்கிய பிறகு பலருக்கும் அது அதிருப்தியை கொடுத்தது. எங்கிருந்தோ வந்த ஒருவர் தமிழ் சினிமாவில் பெரிய இடத்துக்கு முன்னேறி வருவது பலருக்கும் பிடிக்கவில்லை.
#image_title
இப்படிப்பட்ட ஒரு சூழலில் இயக்குநர் கே பாலசந்தரின் கலாகேந்திரா தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் ரஜினி இருக்கிறார். அடுத்து அவர் ஒரு படத்தில் நடிக்க இயக்குநர் கே பாலசந்தர் வாய்ப்பு தரும் சூழலில் அங்கு அவர் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த அலுவலகத்தில் கமல் வருகிறார். அனைவரிடமும் சகஜமாக பேசுகிறார். ரஜினியிடமும் பேசுகிறார். ரஜினிக்கு அப்போதே தெரிந்து விடுகிறது. இப்போதைக்கு நமக்கு தொழில் போட்டியாளர் இவர்தான், அப்படி என்றால் இந்த படத்தில் நமக்கு வாய்ப்பு இருக்காது, கிளம்ப வேண்டியதுதான் என்று நினைத்திருக்கிறார்.
#image_title
அப்போது உள்ளே இருந்து வந்த இயக்குநர் கே பாலசந்தர், கமல்ஹாசனை பார்த்து எதுக்கு நீ இப்ப இங்க வந்தே, உன்னை கூப்பிட்டிருந்தேனா என்று கேட்க, பாலசந்தர் படங்களில் கமல் தொடர்ந்து நடிப்பவர் என்பதால் இது என்னோட கம்பெனி என்று கமல் உரிமையாக கூறியிருக்கிறார். நீ கிளம்பு நான் கூப்பிடறப்போ தான் நீ வரணும் என்று உரிமையாக கூறி அலுவலகத்தை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறார். கமலும் புரிந்துக்கொண்டு உடனே அங்கிருந்து சென்றுவிட்டார் என, இந்த தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
#image_title
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…