விஜய் டிவி நிகழ்ச்சியை பற்றி அர்ச்சனா மகள் சாரா அப்படி சொன்னாரா…. கடும் கோபத்தில் விஜய் டிவி…

By Begam

Published on:

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் ‘அர்ச்சனா’. அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். விஜய் டிவியில் தொகுப்பாளராக சிறந்த பங்காற்றினார்.பின்னர் ஜீ தமிழ்  தொலைக்காட்சிக்கு தாவினார்.

   

இவர் ‘வாவ் லைப்’ என்ற youtube சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலில் தனது தங்கை மற்றும் மகளுடன் இணைந்து பல்வேறு வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அர்ச்சனா.

ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று இருந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.அதிலிருந்து அவரை வெறுக்கும் ஒரு பட்டாளமே தனியாக உருவாகியுள்ளது.

இவர் 2004 ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ”சாரா’என்று ஒரு மகள் உள்ளார். தாய்க்கு பக்க பலமாக இருக்கும் இவர் தாயுடன் சேர்ந்து தொகுப்பாளினியாக  பணியாற்றி வருகிறார்.

அர்ச்சனாவும் அவர் மகள் சாராவும் இணைந்து ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார்கள் . இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர்கள் இருவரும் இணைந்து ‘தாயில்லாமல் நானில்லை’ என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கினர்.

இந்த நிலையில் அர்ச்சனா மகள் சாரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் ‘பிக் பாஸ் நிகழ்ச்சி மிக மோசமானது. என்னுடைய அம்மா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. என்னுடைய அம்மாவின் கேரக்டரை அவர்கள் முழுமையாக காட்டாமல், நெகடிவ் மட்டும் காட்டி மக்கள் மத்தியில் கெட்ட பெயரை வாங்க வைத்து விட்டனர்.’ என்று குறிப்பிட்டுள்ளார். அர்ச்சனா மகள் சாரா வெளியிட்டிருக்கும் இப்பதிவு  பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.