தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் நிறைய திரைப்படங்களில் காமெடியில் அசத்தியவர் கோவை சரளா. அவருக்கு அடுத்தபடியாக வடிவேலுவுடன் ஜோடி போட்டு பல திரைப்படங்களில் காமெடியில் நடித்தவர் தான் ஷோபனா.ஆரம்பத்தில் சின்ன திரையில் நடித்து வந்த இவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இவர் தன்னுடைய முக பாவனை மூலமாக காமெடியில் அசத்தினார்.
அதேசமயம் வடிவேலுவுடன் இவர் பண்ணும் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்படி சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஷோபனா நடித்திருந்த நிலையில் அதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்படி சினிமாவில் உச்சத்தில் இருந்த இவ்வாறு கடந்த 2011 ஆம் ஆண்டு திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் தற்கொலைக்கான காரணம் உடல் ரீதியான பிரச்சனை என கூறப்பட்டது. ஆனால் இவரின் தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது சோபனா சின்னத்திரையில் நடிக்கும் போது அவருடன் வேலை பார்த்த உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து வந்தார்.
இருவரும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இயக்குனர் காதலுக்கு மறுப்பு தெரிவித்து விட்டார். எனவே காதல் தோல்வி காரணமாக தான் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…