‘சந்திரலேகா’ சீரியல் நடிகையான ஸ்வேதா தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.அதில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிந்த ஒரு சீரியல் தான் ‘சந்திரலேகா’. இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ஸ்வேதா பண்டேகர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ஆழ்வார், இதயம், திரையரங்கம், வள்ளுவன் வாசுகி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கிய இவர் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘வள்ளி திருமணம்’ என்ற சீரியல் பூமிகா என்று கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.
இவர் எப்பொழுதும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நடிகை ஸ்வேதா தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது இவர் தனது வருங்கால கனவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அதில் அவர் ‘எனது இதயம் வெகு நாளாக காணாமல் போய் விட்டது. நன்றி கடவுளே. இறுதியாக அதை நான் கண்டுபிடித்து விட்டேன். இவர் தான் எனது காதல்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் பதிவு இதோ….
நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…
மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…
பிரபல நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது…
பிரபல நடிகையான வரலட்சுமி தனது காதலர் நிக்கோலய் சச்தேவுடன் திருமணத்திற்கு முன்பே அவுட்டிங், டேட்டிங் என்று விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கும்…
இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் அவரது மனைவி சைந்தவியை பிரிவதாக நேற்று முன்தினம் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…