#image_title
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு 5 நாட்களில் மட்டும் 750 கோடி வரை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் அவரின் மனைவி நாரா புவனேஸ்வரி யார் இவர் எப்படி இவ்வளவு சொத்து உயர்ந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் .
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் தேசிய அளவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் தனி பெரும்பான்மை கொண்ட கட்சியாக உருவெடுத்துருக்கும் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கின்றது. அதிலும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அந்த கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக மாறி இருக்கிறார். பாஜகவுக்கு அவர் ஆதரவு தருவதற்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், கேபினட் அமைச்சரவை என சில கண்டிஷன்களை சந்திரபாபு கேட்டிருந்தார். இதற்கிடையே அவர் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், அந்த கட்சியுடன் இணைந்து தான் செயல்பட உள்ளதாக தெரிவித்துவிட்டார்.
தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 55 சதவீதம் அதிகரித்து இருக்கின்றது. 1992 ஆம் ஆண்டு இந்த ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவனத்தை தொடங்கியவர் சந்திரபாபு நாயுடு. இதனை அவரது மனைவி நடத்தி வருகின்றார். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனம் இரு முக்கிய துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றது. அதில் ஒன்று பால் பொருள் மற்றும் இன்னொன்று பால். ஹெரிடேஸ் பால் நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வலுவாக இருக்கின்றது. இதைத் தாண்டி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான மார்க்கெட் இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் என்றால் அது சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி தான், கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் 55 சதவீதம் அதிகரித்துள்ள காரணத்தினால் இவரின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது ஜூன் மூன்றாம் தேதி இந்த நிறுவனத்தின் பங்கு ரூபாய் 424க்கு இருந்தது.
ஆனால் தற்போது அதன் பங்கு ரூபாய் 661 ஆக உயர்ந்திருக்கின்றது. இதனால் நாரா புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 535 கோடியாக உயர்ந்து இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராக அவர்களது மகனான நாரா லோகேஷன் இருக்கின்றார். அவரது சொத்து மதிப்பும் கடந்த சில நாட்களில் 237 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…
நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…
நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…
விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…