பிரபல இயக்குனரான பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படம் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் 1977-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. அதன் பிறகு கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1987-ஆம் ஆண்டு வேதம் புதிது திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடித்தார். அமலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்திற்கு தேவேந்திரன் இசை அமைத்தார். வேதம் புதிது படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். வேதம் புதிது படத்தில் இடம்பெற்ற மாட்டு வண்டி சாலை பாடலை மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். இந்த பாடலை கவிப்பேரரசு கண்ணதாசன் எழுதினார். படத்தின் போக்கிற்கு ஏற்றவாறு பாடல் வரிகள் அமைந்திருக்கும்.
கவிஞரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப தேவேந்திரன் இசை அமைத்துள்ளார். மாட்டுவண்டி சாலையிலே பாடலில் இடம் பெற்ற ஒரு வரியை மட்டும் மாற்ற பாரதிராஜா விரும்பினார். பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்ற வரிகளை மாற்ற வேண்டும் என பாரதிராஜா நினைத்தார். இதனால் கவிஞரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பாரதிராஜா நினைத்தால் அவரே அந்த வரிகளை மாற்ற முடியும்.
ஆனால் அப்படி செய்யாமல் வைரமுத்துவிற்காக காத்திருந்தார். சுமார் 6,7 மணி நேரம் கழித்து தான் வைரமுத்துவை தொடர்பு கொள்ள முடிந்தது. உடனே அவரிடம் விஷயத்தை கூறி ஸ்டூடியோவுக்கு வர வைத்துள்ளார். அன்று ஒரு நாள் முழுவதும் அந்த ஒரு வரிக்காக பாரதிராஜா காத்துக் கொண்டிருந்தார், இதனை அடுத்து வைரமுத்து வந்ததும் பச்சைக்கிளி இரண்டும் பண்ணி வைத்த பாவம் என்ன என்ற வரிகளை மாற்றி சின்ன கிளி இரண்டும் செய்துவிட்ட பாவம் என்ன என மாற்றி கொடுத்தார். பாரதி ராஜா நினைத்தபடி பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…
நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமண மற்றும் ரிசப்ஷனை முடித்துவிட்டு காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…